சிறார்களிடம் தமிழார்வத்தை வளர்க்க தொடர்ந்து முயற்சி

சிறார்களிடம் தமிழார்வத்தை வளர்க்க தொடர்ந்து முயற்சி

2 mins read
923ea541-1af3-4540-84a6-63585568d6f6
சிறுபிள்ளைகளிடம் தமிழார்வத்தை வளர்ப்பது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வு. படம்: எட்வின் இயோ -

ஹர்­ஷிதா பாலாஜி

ஆடல், பாடல், நாட­கம், இணை­யம், கைவி­னைப் படைப்­பு­கள் போன்­ற­வற்­றின் உத­வி­யோடு பாடங்­களை வடி­வ­மைத்து, தமிழ்ப் பண்­பாட்­டை­யும் பாடங்­க­ளு­டன் இணைக்­கி­றார் தொடக்­கப் பள்­ளி­யில் தமி­ழா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் திரு­வாட்டி புவ­னேஸ்­வரி சுப்­ர­ம­ணி­யம்.

இவை­யெல்­லாம் தம் மாண­வர்­களுக்­குத் தமிழ்­மொ­ழி­யைக் கற்­றுத் தர திரு­வாட்டி புவ­னேஸ்­வரி கையா­ளும் வழி­மு­றை­களில் சில.

அதே நேரத்­தில், பிரச்­சி­னை­களுக்­கான தீர்­வு­க­ளைத் தாங்­களே கண்­ட­றி­யும்­படி மாண­வர்­களை அவர் ஊக்­கு­விக்­கி­றார்.

"இக்­கா­லத்து மாண­வர்­க­ளுக்கு எதி­லும் ஆர்­வம் அதி­கம். அத­னால், பிரச்­சி­னை­க­ளுக்­குச் சொந்­த­மா­கத் தீர்­வு­கா­ணும்­படி அவர்­களை ஊக்கு­விப்­பது, பாடத்­தைச் சரி­யா­கப் புரிந்து­கொள்ள வழி­வ­குக்­கிறது," என்­றார் திரு­வாட்டி புவ­னேஸ்­வரி.

தமிழ்­மொழி மீதான ஆர்­வத்­தைச் சிறா­ரி­டத்­தில் வளர்ப்­ப­தைப் பற்றி தேசிய நூல­கத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­ரை­யாடி­ய­போது இவற்­றைப் பகிர்ந்­து­கொண்­டார் திரு­வாட்டி புவ­னேஸ்­வரி. அவ­ரு­டன் மேலும் நால்­வர் இந்­தக் கலந்­து­ரை­யா­டல் நிகழ்­வில் பங்­கேற்­ற­னர்.

சிங்­கப்­பூர் புத்­தக மன்­றத்­தின் ஏற்­பாட்­டில் இம்­மா­தம் 26-29 தேதி­களில் நடை­பெற்ற 'ஏஎப்­சிசி' எனப்­படும் சிறு­வர் நூல்­க­ளுக்­கான ஆசிய விழா­வின் ஓர் அங்­க­மாக கடந்த வியா­ழக்­கி­ழமை 26ஆம் தேதி இந்­நி­கழ்ச்சி நடை­பெற்­றது.

'செல்­லமே' எனும் குழந்­தை­களுக்­கான உள்­ளூர் புத்­தக நிறு­வனத்­தின் இணைத்­த­லை­வர்­க­ளான திரு­வாட்டி ரஸ்­மியா பானு யாக்­கோ­பும், திரு­வாட்டி உஷா கும­ர­னும் தாயார்­க­ளாக தங்­கள் குழந்­தை­களுக்­குத் தமிழை எப்­படி அறி­முகப்­ப­டுத்­தி­னர் என்று பகிர்ந்­து­கொண்­ட­னர்.

சிறு­பிள்­ளை­க­ளைக் கவ­ரும் வகை­யில், தர­மான, தொட்­டு­ண­ரக்­கூ­டிய அம்­சங்­கள் அடங்­கிய தமிழ்ப் புத்­த­கங்­களை உரு­வாக்கி, அவற்றை உல­கெங்­கும் உள்ள தமிழ்க் குடும்­பங்­க­ளி­டம் கொண்டு­சேர்க்க வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் அவ்­வி­ரு­வ­ரும் 'செல்­லமே' நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னர்.

"குழந்­தை­க­ளுக்­குக் கேளிக்­கை­யான முறை­யில் தமி­ழைக் கற்­றுக்­கொ­டுத்­தால்­தான் அவர்­கள் நம்­மைப் பின்­பற்றி, தமி­ழில் பேசி பழகு­வார்­கள். அதே சம­யத்­தில், சமூ­கப் பிரச்­சி­னை­களை அறி­மு­கப்­படுத்த பெற்­றோர்­கள் புத்­த­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம். இதற்கு நாங்­கள் எங்­கள் நிறு­வ­னம்­வழி உதவ விரும்பு­கி­றோம்," என்று அவர்­கள் கூறி­னர்.

இதே­போல், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் தமது ஜெர்­மா­னிய கண­வ­ரு­டன் வசித்­து­வ­ரும் சிங்­கப்­பூ­ர­ரான திரு­வாட்டி வனிதா, தம் பிள்­ளை­க­ளுக்கு தமிழ்­மொ­ழி­யைக் கற்­றுத்­தர 'வார­ணம்' என்ற புத்­தக நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னார்.

இறு­தி­யாக, கன­டா­வின் டொரான்டோ நக­ரில் வசிக்­கும் திரு­வாட்டி சரண்யா ஜெனீற் 'தமிழ் கதை நேரம்' என்ற புத்­தக நிறு­வனத்தைப் பற்­றி­யும் 'மாயக்­கல்­லும் அதி­வீ­ரர்­களும்' என்ற புத்­தக்­கத்தை எழு­தி­யுள்­ளதைப் பற்­றி­யும் பகிர்ந்து­கொண்­டார்.