அன்பில் முதிர்ந்த ஆறு அன்னையர்க்கு மகுடம்

அன்பில் முதிர்ந்த ஆறு அன்னையர்க்கு மகுடம்

2 mins read
9ad6c904-517a-4d63-ae36-31ec5815cc16
அன்னையர் தினக் கொண்டாட்டங்களில் கௌரவிக்கப்பட்ட அன்னையர், புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவினருடன் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா (நடுவில்). படம்: புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம் -

புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்­றம் கடந்த ­மா­தம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்­கி­ழமை மாலை ஆறு மணிக்கு அன்­னை­யர் தினக் கொண்­டாட்ட நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு, 'ஐஆர்­சிசி' எனப்­படும் இன, சமய நன்னம்பிக்கை குழு ஆகி­யவை இணைந்து இந்த நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

அன்­னை­யர் தினக் கொண்­டாட்­டத்­தில் ஒவ்­வோர் ஆண்­டும் புது­மை­யான வகை­யில் சிறப்பு அம்­சத்­திற்கு ஏற்­பாடு செய்­யப்­படும் என்று புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் தலை­வர் திரு­மதி கௌசல்யா ராமச்­சந்­திரா கூறி­னார்.

இவ்­வாண்­டின் சிறப்பு அம்­ச­மாக 85 முதல் 92 வயது வரை­யி­லான மூத்த அன்­னை­ய­ருக்கு மரி­யாதை செலுத்­தப்­பட்­டது.

இந்­தி­யர், சீனர், மலாயர் என மூன்று இனங்களில் இருந்தும் இனத்துக்கு இருவர் என்ற அடிப்படையில் ஆறு அன்­னை­யர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு மகு­டம் சூட்டி மரி­யாதை செலுத்­தப்­பட்­டது.

அன்­பா­லும் வய­தா­லும் முதிர்ந்த இந்த அன்­னை­யர்க்கு விருப்­ப­மான பழங்­கள் மற்­றும் பரி­சுப் பொருள்­களும் வழங்­கப்­பட்­டன.

1985ஆம் ஆண்டில் தொடங்­கப்­பட்ட புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு, பெண்­களால் மட்­டுமே நடத்­தப்­பட்டு வரும் ஒரே சமூக மன்­ற நற்பணிச் செயற்குழு என்ற சிறப்­புக்கு உரி­யது.

இந்த ஆண்டு அன்­னை­யர் தினக் கொண்­டாட்­டத்­தில் கடந்த 35 ஆண்­டு­க­ளாக இதில் தொண்­டூ­ழி­யம் செய்த அனைத்து உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்டு சிறப்­பித்­த­னர். புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்ற அன்­னை­யர் தினக் கொண்­டாட்­டத்­தில் ஆடல், பாடல் நிகழ்ச்­சி­க­ளு­டன் அதிர்ஷ்­டக் குலுக்­கல், புதை­யல் வேட்டை போன்ற அங்­கங்­களும் இடம்­பெற்­றன.