அங்கத்தில் குறையிருந்தாலும் கவலையில்லை; அந்தரத்தில் பறந்து சாகசம் படைக்கலாம்

2 mins read
98cfcad8-9844-4a95-8c2d-d5e7758e536d
காற்றழுத்தம் கட்டுப்படுத்தப்பட்ட குழாய்க்குள் பறக்கும் அனுபவத்தைப் பெறும்போது ஒற்றைக் காலுடன் தனது உடலை சமநிலைப்படுத்துவது சவாலாக இருந்ததாகக் கூறினார் திரு கலைவாணன். படம்: 'ஐஃபிளை சிங்கப்பூர்' -

கி. ஜனார்த்­த­னன்

வான்­குடை சாகச வீரர்­கள் விண்­ணில் இருந்து குறிப்­பிட்ட தொலைவு வரை சிற­கின்­றிக் காற்­றில் பறந்து வந்த பிறகே 'பாராசூட்' எனப்­படும் வான்­கு­டையை விரிப்­பார்­கள்.

'ஸ்கை­டை­விங்' எனப்­படும் இந்­தச் சாக­சம் பார்ப்போரைக் கவ­ரக்­கூ­டி­யது. ஆனா­லும் சில­ருக்கு இதில் ஈடு­பட பய­மாக இருக்­க­லாம். இத்­த­கை­யோர் அச்­ச­மின்றி நான்கு சுவர்­க­ளுக்குள்­ளா­கவே இந்த அனு­ப­வத்­தைப் பெறு­வ­தற்­குக் கைகொ­டுக்­கிறது 'ஐஃபிளை' சிங்­கப்­பூர்.

செந்­தோ­சா­வில் அமைந்­துள்ள 'ஐஃபிளை சிங்­கப்­பூர்' உல­கின் முதல் உள்­ள­ரங்க 'ஸ்கை­டை­விங்' நட­வ­டிக்­கைக்­கான நிலை­யம். இதில் 56.5 அடி உய­ர­மும் 16.5 அடி விட்­ட­மும் கொண்ட கண்­ணா­டிக் குழாய்க்­குள்ளே விண்­ணில் இருந்து குதிக்­கும் அனு­ப­வத்­தைப் பெற­லாம்.

12,000 அடி உய­ரத்­தில் இருந்து 3,000 அடி வரை பறந்து கீழி­றங்­கும் அனு­ப­வத்­துக்கு இது ஈடா­கும்.

இந்த ஆண்டு அதன் 10ஆவது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டும் 'ஐஃபிளை சிங்­கப்­பூர்' கண்­பார்­வை­யற்­றோர், உடற்­கு­றை­யுள்­ளோர் போன்­றோ­ருக்­கான சிறப்பு நட­வ­டிக்­கைக்கு ஏற்­பாடு செய்­தது.

இவர்­க­ளுக்கு மாறு­பட்ட அனு­ப­வத்தை வழங்­கு­வது நோக்­கம்.

ஏழு வய­துச் சிறார்­கள் முதல் நூறு வயது வயோ­தி­கர்­கள் வரை ஏறக்­கு­றைய 1,000க்கும் மேற்­பட்­டோர் இந்­ந­ட­வ­டிக்­கை­யில் பங்­கேற்­ற­தாக 'ஐஃபிளை சிங்­கப்­பூர்' தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தது.

சிறப்பு நட­வ­டிக்­கை­யில் கலந்­து­கொண்­டோ­ரில் 63 வயது கலை­வா­ண­னும் ஒரு­வர். இளம் வய­தி­லேயே ஒரு காலை இழந்த இவர் ஓர் உட­லு­று­திப் பயிற்­று­விப்­பா­ளர்.

தனது உடல் வலி­மை­யைச் சோதிக்­கக்­கூ­டி­ய­தாக இந்­ந­ட­வ­டிக்கை இருந்­தது என்­றார் கலை­வா­ணன். "இருந்­தா­லும் இந்த அனு­ப­வம் மனத்­திற்கு உல்­லா­ச­மாக இருந்­தது," என்று அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் முன்­னாள் அதி­கா­ரி­யான கலை­வா­ண­னின் முழங்­கா­லில் கட்டி வளர்ந்­த­தால் 22 வய­தில் அவ­ரது இடது காலை மருத்­து­வர்­கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நேரிட்­டது.

இரு பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தை­யான இவர் பல்­வேறு சிர­மங்­க­ளுக்­கி­டையே எதிர் நீச்­சல் போட்டு உட­லு­று­திப் பயிற்­று­விப்­பா­ள­ரா­கத் தன்னை நிலை­நி­றுத்­திக்கொண்­ட­வர். இந்­தச் சிறப்பு நட­வ­டிக்கை மிகுந்த பாது­காப்­பு­டன் தமக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தாக அவர் சொன்­னார்.

வாழ்க்­கை­யில் பல்­வேறு இடை­யூ­று­களை வெற்­றி­க­ர­மாக எதிர்­கொண்ட கலை­வா­ணன் போன்­றோ­ருக்கு இந்த அனு­ப­வம் மறக்க முடி­யா­த­தாக அமை­யும் என நம்­பு­வ­தாக 'ஐஃபிளை' சிங்­கப்­பூ­ரின் நிறு­வ­ன­ரும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான திரு லாரன்ஸ் கோ கூறி­னார்.