ஆசிய புத்தாக்க எழுத்துமுறை திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் சியெனா கல்லூரி துணை பேராசிரியர் முனைவர் பெருந்தேவி நடத்தும் கவிதைப் பயிலரங்கு, உரைகள் இணையத்திலும், நேரடி நிகழ்வாகவும் நடக்கின்றன.
'சமகாலத் தமிழ்க் கவிதை' என்ற தலைப்பிலான பயிலரங்கில் கலந்துகொள்வோர், கவிதையில் எவ்வாறு சொற்சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது, தேய்வழக்குகளைத் தவிர்ப்பது, எவ்வகைகளில் திருத்தி எழுதுவது ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.
'லிரிக்கல்' கவிதை வடிவம், எதிர்கவிதை ஆகியவை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
ஜூன், ஜூலை மாதங்களில் இடம்பெறவிருக்கும் இப்பயிலரங்கு தேசிய நூலகத்தில் காலை முதல் மதியம் வரை நடைபெறும்.
பெரியோரும் மாணவர்களும் முறையே $150, $60 கட்டணம் செலுத்தி ஆறு நாள் பயிலரங்கில் கலந்துகொள்ளலாம். 16 வயதுக்கு மேலுள்ள மாணவர்களுக்கு இலவச அனுமதி உண்டு.
பதிவு செய்வதற்கான இறுதி நாள், ஜூன் 6.
மேல் விவரங்களுக்கு: https://blogs.ntu.edu.sg/acwp/2021/07/07/perundevi-ps1a/
இன்று இடம்பெறும் பெருந்தேவியின் கவிதை குறித்த உரையைக் கேட்க விரும்புவோர் பதிவு செய்க: http://bit.ly/acwp-ps7

