வயதானவர்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி
குறைபாட்டுடன் இருப்பார்கள் என்பதில்லை. அது அவர்களின் மனம் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலுக்கு பாதுகாப்புக் கவசமாகும்.
பிறக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று பலவீனமாக இருக்கும். தாய்ப்பாலும் ஊட்டச்சத்து உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதுபோலவே
வயதாகும்போது மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும்.
தன்னம்பிக்கையும் ஊட்டச்சத்துமிக்க உணவும்தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனா நோய்த்தொற்று நீடிக்கும் இந்த காலகட்டத்தில் வயதானவர்கள் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க:
தினமும் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெதுவான மற்றும் ஆழமான சுவாசம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். சிந்தனை
களைப் பகுத்தறிந்து செயல்படவும் ஊக்குவிக்கும்.
வயதானவர்கள் குழந்தை
களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கலாம். குழந்தைப் பருவத்தில் விளையாடிய விளையாட்டுகளை மீண்டும் விளையாடி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளலாம்.
சமையலில் உப்பையும்
எண்ணெய்யையும் குறைத்துக்கொள்வது செரிமான அமைப்புக்கு நல்லது. பழங்கள், காய்கறிகள்
சாப்பிடுவதும் செரிமான செயல்பாடுகளுக்கு துணைபுரியும்.
தண்ணீர், பழச்சாறு, மூலிகை தேநீர் போன்ற பானங்களை குறிப்பிட்ட இடைவெளியில் பருகுவது நீர்ச்சத்தைத் தக்கவைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி தூக்கத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. தூக்கமின்மை நோய்
களுக்கு முதல் காரணமாக
அமைந்துவிடும். இளைஞர்களுடன் ஒப்பிடும்போது வயதானவர்கள் தூக்க விஷயத்தில் அசட்டையாக இருக்கக்கூடாது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்
படுத்துவதற்கு போதுமான அளவு ஓய்வு எடுத்தாக வேண்டும். தினமும் இரவு குறைந்தது 7 மணி
நேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவை உடலின் இயற்கையான தூக்கவிழிப்பு சுழற்சியை சீர்குலைக்கும் என்பதால் தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளும் சர்க்கரையும் அதிக உடல் பருமனுக்கு வித்திடும்.
வயதான காலத்தில் உடல்
பருமன் பிரச்சினையை எதிர்கொள்வது இருதய நோய், நீரிழிவு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினை
களுக்கு வித்திடும். ஆதலால் உடல் எடையில் கவனம் வைக்கவேண்டும்.
உடற்பயிற்சி செய்
தாலோ, வேலை செய்தாலோ, வெப்பமான சூழ்நிலையில் இருந்தாலோ உடலுக்கு அதிக திரவங்கள் தேவைப்படும்.
வயதானவர்களுக்கு பெரும்பாலும் தாகம் எடுப்பதில்லை. தாகத்தை உணராவிட்டாலும் போதுமான இடைவெளியில் தவறாமல் திரவ உணவுகளைப் பருக வேண்டும்.
வயதானவர்கள் இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களில் போதிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

