ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை வீட்டிற்குள்தான்
செலவிடுகிறோம். வீட்டுச்
சூழல் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தருவதாக அமையவேண்டும்.
1980களில் அமெரிக்காவின் 'நாசா' அமைப்பு நடத்திய ஆய்வில், வீட்டு தாவரங்களின் வேர்கள், மண் ஆகியவை காற்றில் கலந்
திருக்கும் கரிம சேர்மங்
களின் செறிவைக் கணிசமாகக் குறைப்பது கண்டறியப்பட்டது.
வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடியானது இயற்கையாகவே வீட்டிற்குள் இருக்கும் அசுத்த காற்றை தன்னுள் கிரகித்து சுத்தமான காற்றை வெளியிடுவதாக கூறப்படுகிறது. அதனால்தான் பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளும் பல வகையான செடிகள் வளர்க்கின்றனர்.
மேலும் வீட்டிற்குள் பச்சை பசேலென பசுமை நிறைந்த
செடிகளை வளர்ப்பதால் நேர்மறை அதிர்வலைகளும் அதிகரிக்கும். பார்ப்பதற்கே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் இந்தச் செடி வகைகளை வீட்டிற்குள் வளர்ப்பது நன்மையே தரும்.
உட்புறச் செடிகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவு
வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது தொடர்பான
ஆய்வுக்கு வீட்டில் செடிகளை வளர்ப்பவர்கள், வளர்க்காதவர்கள் என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
அவர்களின் ரத்த அழுத்தம், இதய துடிப்பு, மன அழுத்தம் போன்றவை பதிவு செய்யப்பட்டன. வீட்டில் செடி வளர்ப்பவர்கள் எந்தவொரு மன நெருக்கடிக்கும் ஆளாகாமல் நிதானமாக இருப்பது தெரியவந்தது. ஆனால் செடி வளர்க்காதவர்
களிடம் மேற்கொண்ட பரிசோதனையில் இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உயர்ந்து இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இருந்தாலும் ஒரு சில செடிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை குழந்தைகள், செல்லப் பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். செடிகள் வாங்கும்போது இவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

