தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பதின்ம வயதினர் மீது சமூக ஊடகத்தின் தாக்கம்

3 mins read
3d7a5336-c612-4ad4-91bd-93cf27f2a849
படம்: பிக்சபே -

பதின்ம வய­துப் பெண்­கள் தங்­களின் கைபே­சி­யில் சரா­ச­ரி­யாக 14 முறை 'செல்ஃபி' எடுத்த பின்­னரே அதில் ஒன்­றைத் தங்­கள் சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­வ­தாக அண்­மைய ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது.

தங்­க­ளின் படத்தை மெரு­கூட்டி­னால் மட்­டுமே தாங்­கள் பார்ப்­ப­தற்கு அழ­காக இருப்­ப­தாக நான்­கில் ஒரு­வர் கூறு­கி­றார். அத்­து­டன் சமூக ஊட­கத்­தில் சித்­தி­ரிக்­கப்­படும் அழகு சார்ந்த செய்­தி­க­ளைப் பார்க்­கும்­போது தங்­க­ளின் தன்­னம்­பிக்கை குறை­வ­தாக இரண்­டில் ஒரு­வர் கூறு­வ­தாக 'டவ் செல்ஃப்-எஸ்­டீம் புரொ­ஜெக்ட்' ஆய்வு தெரி­வித்­துள்­ளது. சமூக ஊட­கம் ஏற்­ப­டுத்­தி­வ­ரும் தாக்­கத்தை எதிர்த்­துப் போரி­டு­வது பெற்­றோ­ருக்­குச் சிர­ம­மாக இருக்­க­லாம்.

இருப்­பி­னும், 'இது­தான் அழகு' என்று சமூக ஊட­கங்­களில் நம்­பத்­தகாத முறை­யில் சித்­தி­ரிக்­கப்­படும் அம்­சங்­கள் தொடர்­பில் தங்­களின் பெற்­றோர் தங்­க­ளி­டம் பேச வேண்­டும் என்று பதின்ம வய­துப் பெண்­களில் 70 விழுக்­காட்­டி­னர் விரும்­பு­வ­தா­க­வும் ஆய்வு கூறு­கிறது.

பதின்ம வய­தி­னர் தங்­க­ளின் நண்­பர்­க­ளு­டன் செல­வி­டும் நேரத்­தைக் காட்­டி­லும் கைபே­சி­யின் சமூக ஊட­கப் பக்­கங்­க­ளில்­தான் மூழ்­கி­யி­ருப்­பதை இந்­நா­ளில் விரும்பு­கின்­ற­னர். யூடி­யூப், டிக்­டாக் தளங்­களில் காணொ­ளி­கள் பார்ப்­ப­தும் ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் பக்­கங்­களில் பதி­வி­டு­வ­து­மாக குனிந்த தலை நிமி­ரா­மல் இவ்­வ­ய­தி­னர் நட­மா­டு­கின்­ற­னர்.

குடும்­பத்­தா­ரு­ட­னும் நண்­பர்­களு­ட­னும் இணைந்­தி­ருக்­கச் சமூக ஊட­கங்­கள் கைகொ­டுத்­தா­லும் சமூக ஊட­கப் பயன்­பாட்­டால் 14 வய­து­டை­யோ­ருக்­குள் மனச்­சோர்வு அறி­கு­றி­கள் ஏற்­ப­டு­வ­தாக மருத்­துவ இத­ழான 'ஈகி­ளி­னிக்­கல்­மெ­டி­சன்' குறிப்­பிட்­டுள்­ளது. கவலை, அதி­ருப்தி, தனிமை போன்ற உணர்வு­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த மனச்­சோர்வு அறி­குறி­கள் அமைந்­துள்­ளன.

ஆண்­பிள்­ளை­க­ளைக் காட்­டி­லும் பெண்­பிள்­ளை­க­ளி­டையே இந்­தப் பாதிப்பு அதி­க­மாக இருப்­ப­தா­க­வும் கண்­ட­றி­யப்­பட்­டது.

ஒரு நாளில் ஒன்­றி­லி­ருந்து மூன்று மணி நேரம் வரை சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­தும் பதின்ம வய­தி­ன­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஐந்து மணி நேரத்­திற்கு மேல் சமூக ஊட­கத்­தைப் பயன்­ப­டுத்­தும் பதின்ம வய­துப் பெண்­க­ளி­டையே 50% அதி­க­மான மனச்­சோர்வு அறி­கு­றி­கள் காணப்­பட்­டன என்­றும் பதின்ம வயது ஆண்­க­ளி­டையே பதி­வான அதி­க­ரிப்பு 35% என்­றும் அறி­யப்­ப­டு­கிறது.

சேர்ந்து சமூக ஊட­கப்

பக்­கங்­க­ளைப் பார்­வை­யி­டுங்­கள்

பதின்ம வய­து­டைய உங்­க­ளின் பிள்­ளை­யு­டன் சேர்ந்து அமர்ந்­த­வாறு அவர்­க­ளின் சமூக ஊட­கப் பக்­கத்­தில் தோன்­றும் தக­வல்­க­ளை­யும் படங்­க­ளை­யும் பார்­வை­யி­டுங்­கள்.

எவை உண்மை, எவை பொய் என்று கருத்து கேளுங்­கள். சமூக ஊட­கத்­தில் சிலர் தங்­க­ளின் சரு­மம் மேலும் பொலி­வா­க­வும் அழ­கா­க­வும் தோன்­றவோ உடல் மெலிந்து காணப்­ப­டவோ தங்­க­ளின் படங்­களுக்கு மெரு­கூட்டி இருக்­க­லாம் என்று உங்­க­ளின் பிள்­ளை­களி­டத்­தில் உணர்த்­துங்­கள்.

பொய்­யான முகத்தை இணை­யத்­தில் காண்­பிக்­கும்­போது அதில் நம்­பகத்­தன்மை குறை­கிறது என்­பதை எடுத்­துச் சொல்­லுங்­கள்.

பய­னுள்ள பயன்­பாட்டை

ஊக்­கு­வி­யுங்­கள்

பதின்ம வய­தி­ன­ரி­ட­மி­ருந்து அவர்­களின் கைபே­சி­யைப் பிரிப்­பது கடி­னம். அத­னால் கைபே­சி­யைப் பய­னுள்ள முறை­யில் பயன்­படுத்த அவர்­களை ஊக்­கு­வி­யுங்­கள்.

வெளி­நாட்­டில் இருக்­கும் உற­வினர்­கள், நண்­பர்­கள் ஆகி­யோ­ரு­டன் இணை­ய­வும் அறி­வைப் பெருக்­கும் வகை­யில் அமைந்த தக­வல்­களை நாட­வும் சமூக ஊட­கங்­க­ளின் பக்­கம் செல்­லு­மாறு வலி­யு­றுத்­துங்­கள்.

பலன் தரா­த­வற்­றைப்

புறந்­தள்­ளுங்­கள்

இணை­யத்­தில் தங்­களை பாதிக்­கும் வகை­யில் அழகு பரா­ம­ரிப்பு ஆலோ­ச­னை­கள் அமைந்­தால் ஒரு சிலர் உடனே அந்­தக் குறிப்­பிட்ட சமூக ஊட­கப் பக்­கத்­திற்கு மீண்­டும் செல்­லா­த­வாறு முடக்கி­வி­டு­கிறார்­கள். அவ்­வாறு செய்த பிறகு தங்­க­ளுக்கு ஆறு­த­லாக இருப்­ப­தாக நான்­கில் இரண்டு பெண்­கள் கூறு­கின்­ற­னர்.

பிள்ளைகளின் உலகுக்குள் செல்லுங்கள்

அத­னால், பெற்­றோர் முத­லில் தங்­க­ளின் பிள்­ளை­கள் நாடும் சமூக ஊட­கப் பக்­கங்­க­ளைப் பற்றி அறிந்­தி­ருத்­தல் அவ­சி­யம். மற்ற பெற்­றோ­ரு­ட­னும் இது குறித்­துக் கலந்­து­ரை­யாடி ஆலோ­ச­னை­க­ளைப் பரி­மா­றிக்­கொள்­ள­லாம்.

முக்­கி­ய­மாக, உங்­கள் பிள்­ளை­க­ளிடம் வெளிப்­படை­யாகப் பேசுங்­கள். உங்­களின் பதின்ம வய­துப் பிள்­ளை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது நோக்­க­மல்ல.

தங்­களின் சமூக ஊட­கப் பயன்­பாடு தொடர்­பில் அவர்­கள் எடுக்­கும் முடி­வு­கள் நன்மை தரக்­கூ­டி­ய­தாக இருப்­பதை அவர்­களுக்கு உணர்த்­து­வதே நோக்­க­மாக இருக்க வேண்­டும்.

செய்தி: இணையம்