பேச்சுத்திறனை ஊக்குவித்த நாடகப் பயிலரங்கு

பேச்சுத்திறனை ஊக்குவித்த நாடகப் பயிலரங்கு

1 mins read
fc6f26bb-0692-497c-bb82-7a6b89bc9f6c
நாடகப் பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள் நடித்துக் காட்டிய ஒரு காட்சி. செய்தி, படம்: உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு -

ஜூன் பள்ளி விடு­மு­றையை முன்­னிட்டு மாண­வர்­க­ளுக்­காக இந்­தி­யர் நற்­பணி செயற்­குழு ஒரு வார நாட­கப் பயி­ல­ரங்­குக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. அதில் 25க்கு மேற்­பட்ட 10 முதல் 16 வய­து­டைய மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

இப்­ப­யி­ல­ரங்­கில் மாண­வர்­கள் முன்­னோடி சமூ­கத் தலை­வர் தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பாணி, வர­லாற்று நாய­கன் சங் நீல உத்­தமா ஆகி­யோ­ரின் சிங்­கப்­பூர் கதை­களை நாட­க­மாக மேடை­யேற்­றி­னார்­கள்.

விடு­முறை தொடங்­கிய உடனே மாண­வர்­கள் விரை­வில் விண்­ணப்­பித்து ஒரு வாரத்­தி­லேயே இந்­நி­கழ்ச்­சிக்­குத் தயா­ரா­னார்­கள். நிகழ்ச்­சி­யின் முடி­வில் பங்­கேற்ற அனை­வ­ருக்­கும் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­டன.

உட்­லண்ட்ஸ் அடித்­தள அமைப்பு­க­ளின் ஆலோ­ச­கர் மரி­யம் ஜாஃப­ரின் வழி­காட்­டு­த­லின்­கீழ் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது இந்­தப் பயி­ல­ரங்கு. இது­போன்ற நாட­கப் பயி­ல­ரங்­கு­களும் மேடை நிகழ்ச்­சி­களும் அரங்­கேற்­று­வது உட்­லண்ட்ஸ் சமூக மன்­றத்­துக்கு இதுவே முதல் முறை.

அதி­பதி நாட­கக் குழு­வைச் சேர்ந்த திரு புக­ழேந்தி இப்­ப­யி­ல­ரங்­கின் பயிற்­று­விப்­பா­ள­ரா­க­வும் பொறுப்­பா­ள­ரா­க­வும் இருந்து வழி­நடத்­தி­னார்.

இந்­தப் பயி­ல­ரங்கு மாண­வர்­கள் மத்­தி­யில் தமிழ் மொழி­யை­யும் பேச்­சுத்­தி­ற­னை­யும் மேம்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் தொடங்­கப்­பட்­டது. அத்­து­டன் சிங்­கப்­பூர் வர­லாறு, அற­நெ­றி­கள், பண்­பு­நலன்­கள், இந்­திய கலா­சா­ரம் ஆகி­ய­வற்றை மாண­வர்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­ப­தில் பயி­ல­ரங்கு கவ­னம் செலுத்­தி­யது.