இளநரையைத் தடுக்க இயற்கை வைத்தியம்

இளநரையைத் தடுக்க இயற்கை வைத்தியம்

3 mins read
52c65970-bf79-4ed3-9ef0-7d673128f282
வயது, பாலி­னப் பேத­மில்­லா­மல் எல்­லா­ரும் இள­ந­ரைப் பிரச்­சி­னைக்கு ஆளா­கி­றார்­கள். இந்த இள­நரை யைக் கண்டு பயப்­பட வேண்­டி­ய­தில்லை. தொடக்­கத்­தி­லேயே கவ­னித்து உரிய பரா­ம­ரிப்பு மேற்­கொண்­டால் இள­ந­ரை­யின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். கோப்­புப் படம் -
multi-img1 of 2

இள­நரை இருந்­தாலே கவ­லை­தான். என்­னங்க, வய­தா­கி­ விட்டதா என்று சிலர் கேட்டு நம்மை மேலும் கவலையில் ஆழ்த்திவிடுவார்கள்.

ஒரு­வித தாழ்வு மனப்­பான்மை, கவலை, வருத்­தம் என எல்­லாமே தொடங்கி, மன­தில் மகிழ்ச்­சி­யையே மறக்­கச் செய்­து­வி­டும். மீண்­டும் முடியைக் கரு­மை­யாக்க என்ன செய்­ய­லாம் என்று ஒவ்­வொ­ரு­வரிடமும் ஆலோ­சனை கேட்­பது மட்டு மல்­லா­மல் சிலர் இணை­யத்­தில் தீர்வு இருக்­கி­றதா என்றும் தேட ஆரம்­பித்­து­வி­டு­வார்­கள்.

சில­ருக்கு இள­நரை இருந்­தா­லும் கவ­லையில்லை. முடியை கரு­மை­யாக்­கிக்கொள்­வார்­கள். இல்­லை­யென்­றால் ஆம், வய­தா­கிறது என்று சொல்லி கவலையில்லாமல் நகர்ந்து விடுவார்கள்.

சிலர் இள­ந­ரை­யி­லேயே சில இடங்­களில் மட்­டும் வண்ண, வண்ண தலை­முடிச் சாயங்­க­ளைப் பூசி அழ­கு­ப­டுத்திவிடு­வார்­கள்.

இள­ந­ரை­யைத் தடுக்க பல்­வேறு ரசா­ய­னக் கல­வை­கள் இருந்­தா­லும் இயற்கை வைத்­தி­யம் தலை­மு­டிக்­கும் நல்­லது, பக்­க­வி­ளை­வு­களும் ஏற்­ப­டாது.

'பி12' ஊட்டச்சத்து

'பி12' ஊட்­டச்­சத்து குறை­பாடு: தவ­றான உண­வுப்­ப­ழக்­கங்­களும் உட­லில் பல்­வேறு ஊட்­டச்­சத்­துக் குறை­பா­டு­களும் சரு­மம், பல் மற்­றும் தலை­மு­டியை மிக மோச­மா­கப் பாதித்துவிடும். அந்த வகை­யில் 'பி12' ஊட்­டச்சத்து குறை­பாடு இள ­ந­ரை­யைத் தோற்­று­விக்­கும் கார­ணி­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது. இத­னால் உண­வில், போது­மான அளவு 'பி12' ஊட்­டச்­சத்து இருக்கிறதா என்­பதை உறுதி செய்­வது அவ­சி­யம். பால், சோயா பால், இறைச்சி, மீன், முட்டை. பாலா­டைக்­கட்டி, வேர்க்­க­டலை போன்­ற­வற்­றில் 'பி12' ஊட்­டச்­சத்து அதி­க­மாக இருக்­கிறது. வேறு ஏதா­வது 'பி12' ஊட்டச்­ சத்து உள்ள உண­வை­யும் அன்­றாட உண­வில் சேர்த்­துக்கொள்­ள­லாம்.

நீண்டகாலமாகப் புகைபிடித்தல்:

இள­மை­யி­லேயே தலை­முடி நரைப்­ப­தற்கு நீண்­ட­கா­ல­மா­கப் புகை­பி­டித்­த­லும் ஒரு கார­ணம் என்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அத­னால் புகை­பி­டிப்­ப­வ­ராக இருந்­தால் தலை­மு­டிக்கு மட்­டு­மல்ல உடல் ஆரோக்கியத்­துக்­கும் அதனைக் கைவி­டு­வது நல்­லது.

தலைமுடி பராமரிப்புப் பொருள்கள்

வண்­ணச் சாயங்­கள், தலை­முடி 'ப்ளீச்­சிங்' பொருள்­கள், ஷாம்பூ மற்­றும் கண்­டி­ஷ­னர் ஆகி­ய­வற்­றில் உள்ள ஹைட்­ர­ஜன் பெராக்­ஸைட் தலை­மு­டிக்­குக் கேடு விளை­விக்­கும். தலை­மு­டியை, முடிந்­த­வரை இயற்­கைத்­தன்மை பாதிக்­காமல் பரா­ம­ரிக்கலாம்.

பற்பசை: பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள 'ஹைட்ரஜன் பெராக்ஸைட்' அதிகமாகப் பயன்படுத்தப்படும்பொழுது, அது இளநரையை உண்டாக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

கருவேப்பிலை, முருங்கை கீரை, மருதாணி இலை

நரை முடியை முற்­‌றி­லும் ஒழிக்க கறி­வேப்­‌பி­லையை உண­வில் சேர்­‌த்­துக்கொண்­டால் போதும். தலைமுடி கருகருவென்று வலுவாக வளரும். தலைக்கு குளித்த சில நிமிட நேரத்­தில் தலைக்கு எண்­ணெய் தேய்க்கக் கூடாது. தலைக்­குக் குளித்­த­தும் ஈரம் காய்­வ­தற்கு முன்பே எண்­ணெய் வைப்­ப­தால்­தான் பல­ருக்கு செம்­பட்டை நிறத்­தில் முடி வளர்­கிறது. அதோடு முடி அதி­கம் கொட்­ட­வும் செய்­கிறது. இத­னால் முளைக்­கீ­ரையைத் தின­மும் சாப்­பிட்டு வந்­தால் நரைமுடி கறுப்­பாக மாறும்.

முருங்­கை­ கீ­ரை­யில் இரும்­புச் சத்­தும், கால்­சி­ய­மும் அதி­க­மாக உள்­ளது. இத­னால் முருங்கை கீரையை வாரம் இரு முறை உண­வில் சேர்த்­துக்­கொண்­டால் முடி உதிர்­வது நிற்­ப­து­டன் நீள­மாக வள­ரும்.

மரு­தாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் சிறி­த­ளவு எலு­மிச்­சம் பழச்­சா­றை­யும், வெந்­த­யத் தூள் இரண்டு தேக் கரண்டியும் கலந்து கொள்ள வேண்­டும்.

இக்­க­ல­வையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்­டும். காலை­யில் எழுந்­த­தும், இக்­க­ல­வையை அனைத்து முடி­க­ளி­லும் படும்­படி நன்­றாகத் தேய்த்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற­வைத்து பிறகு சீயக்­காய்த்­தூள் தேய்த்து நல்ல தண்­ணீ­ரில் கழுவ வேண்­டும்.

குறிப்­பாக மரு­தா­ணியை போடு­வ­தற்கு முன்பு தலை­யில் எண்­ணெய் பசை இல்­லா­த­வாறு பார்த்துகொள்ள வேண்­டும். இப்­ப­டிச் செய்து வந்­தால் இள­நரை மறை­ய­லாம்.