வெற்றிலை வெற்று இலையல்ல; மருத்துவ மூலிகை

வெற்றிலை வெற்று இலையல்ல; மருத்துவ மூலிகை

2 mins read
a1881cd9-c4d6-4170-a433-33a6c361fdc2
செரிமானத்திற்கு வெற்றிலை மிகவும் நல்லது. இதற்குத்தான் விருந்து முடிந்ததும் வெற்றிலை கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கோப்புப் படம்: இணையம் -

வெற்றிலை, வெறும் இலையல்ல. மருத்துவ மூலிகை.

நரை, திரை, மூப்பு போன்றவற்றை நீக்கி உடலை நோயின்றி காக்கும் தன்மை கொண்டது வெற்றிலை. கற்பக மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. ஆனால் வெற்றிலையின் பயன்பாடு குறையக் குறைய அதன் மருத்துவ குணங்கள் பற்றிய தக வல்களும் பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.

நோய், நொடியின்றி பல வருடம் நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு பல காரணங்களில் வெற்றிலையும் ஒன்று.

வீட்டிற்கு வந்தவர்கள் எந்தவித மனக்கசப்பும் இன்றி செல்வதற்காக வெற்றிலை பாக்கு கொடுப்பது தமிழர்களின் பண்பாடாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. வெற்றிலை கொடுப்பது பாரம்பரியம் மட்டுமல்ல, அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது.

வெற்றிலை செடி என்பது ஆண்டு முழுவதும் படர்ந்து குட்டை யான பல தண்டு வேர்களைக் கொண்ட ஒல்லியான செடியாகும். இதன் பயன்பாடு 2000 ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

வெற்றிலை பயன்படுத்தும்போது, அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

வெற்­றி­லை­யில் 84.4% நீர்ச்­சத்து, 3.1% புர­தச்சத்து, கால்­சி­யம், கரோட்டின், தய­மின், ரிபோ­பி­ளே­வின் மற்றும் 'சி' ஊட்­டச்­சத்து உள்­ளது. தற்­போ­தைய ஆய்­வு­களில் வெற்றி­லை­யில் மிக­வும் வீரி­ய­மிக்க, நோய் எதிர்ப்­புத் திறன் கொண்ட சவிக்­கால் (Chavicol) என்­னும் பொருள் இருப்­ப­தா­கக் கண்­ட­றி­யப் பட்­டுள்­ளது.

பொது­வாக வெற்­றிலை பாக்கு, சுண்­ணாம்பு ஆகி­ய­வற்றை சரி­யான விகி­தத்­தில் கலந்து சுவைக்­கும் போது அந்­தச் சுவை உட­லை­யும் மூளை­யை­யும் சுறு­சு­றுப்­ப­டைய செய்­கிறது, அதேநேரம் இத­யத்தையும் வலுப்­ப­டுத்­து­கிறது.

செரி­மா­னச் சக்­திக்கு சிறந்­தது வெற்­றிலை. வெற்­றி­லையை வாயில் இட்டு மெல்­லு­வ­தால் ஜீரண சக்தி அதி­க­ரிக்­கிறது. ஜீரண மண்­ட­லம் நன்­றாக செயல்­பட்­டால் பல நோய்­கள் நம்மை அண்­டாது. இதற்கு தான் விருந்து முடிந்­த­தும் வெற்­ிலை போடும் பழக்­கம் நமது மர­பில் உள்­ளது.

வெற்­றி­லையை மென்று சாப்­பிடு வ­தால் மலச்­சிக்­கல் நீங்­கும். நன்கு பசி உண்­டா­கும்; வாய்ப்­புண், வயிற்றுப்புண் நீங்­கும்.

வெற்­றி­லைக்கு வலியை நீக்­கும் குண­மும் மயக்­கத்­தைப் போக்­கும் குண­மும் உண்டு.

மூன்று வெற்­றி­லை­களை எடுத்து அதைக் கசக்கி, கிடைக்­கும் சாற்றில் கொஞ்­சம் கற்­பூ­ரத்­தைப் போட்டு நன்­றாகக் குழைத்து, நெற்­றிப் பகு­தி­யில் பற்று போட்­டால் தலை­வலி பறந்­து­போ­கும்.

வெற்­றி­லைச்­சா­று­டன் இஞ்­சிச் சாறு சம­மா­கக் கலந்து தின­மும் காலை வேளை­யில் வெறும் வயிற்­றில் அருந்தி வந்­தால், நுரை யீரல் சம்­பந்­தப்­பட்ட நோய்­கள் நெருங்­காது. இவ்­வாறு தொடர்ந்து ஒரு மண்­ட­லம் அருந்­து­வது நல்­லது.

முகப்­ப­ருக்­களை நீக்­கும்: முகத்­தில் பருக்­கள் இருப்­பின் வெற்­றி­லையை அரைத்து அதை பருக்­கள் உள்ள இடத்­தில் தடவி வாருங்­கள்.

வெற்­றி­லை­யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு மற்­றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்­பு­கள் முகப் பருக்­களைப் போக்க உத­வும். வெற்­றிலை கொதிக்க வைத்த நீரால் முகத்தைக் கழுவி வந்­தா­லும் பருக்­கள் அக­லும்.