சிங்கப்பூரில் உள்ள பல கடைகளில் நீங்கள் கொம்புச்சா தே நீரைப் பார்த்திருக்கலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த அதைச் சுவைத்திருக்கலாம்.
இன்று இளையர்கள் மத்தியில் பிரபலமான கொம்புச்சா தேநீர், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தோன்றி, பின்னர் ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் பிரபலம் ஆனது. இப்போது ஐரோப்பா, அமெரிக்காவிலும் அது மிகப் பிரபலம்.
தயிரில் உள்ள நன்மைகள் இதில் உண்டு என்று கூறப்படுகிறது. கொம்புச்சா தேயில் புரோபயோட்டிக் எனப்படும் நலநுண்ணுயிரியும் வைட்டமின் பி சத்தும் அதிகம் உள்ளது. அதனால் இது செரிமானத்துக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், உடலில் உள்ள கசடை நீக்கி, உடலுக்கு எதிர்ப்புச்சக்தியையும் புதுத்தெம்பையும் இந்த பானம் அளிக்கும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

