யுகேஷ் கண்ணன்
ஸ்ரீ நாராயண மிஷன் தனது 75ஆம் ஆண்டு நிறைவு விழாவை 75 உறுப்பினர்களுடன் 7.5 கிலோ
மீட்டர் மரபுடைமை நடையோடு கொண்டாடியது.
இனம், மொழி, சமய வேற்றுகள்இன்றி அனைவருக்கும் அன்போடும் அக்கறையோடும் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு 1948ஆம் ஆண்டு தொடங்கப்
பட்டது ஸ்ரீ நாராயண மிஷன்.
தொடர்ந்து 1970களில் 'ஸ்ரீ
நாராயண மிஷன், ஒரு தாதிமை தாதிமை இல்லத்தை' நிறுவியது.
தற்பொழுது தாதிமை இல்லம், இரண்டு முதியோர் பராமரிப்பு மையங்கள், ஆதரவற்ற ஆண்களுக்கான உதவி மையம் என மூன்று நிலையங்களின் வழி சமூகத்திற்கு சேவையாற்றி வருகிறது ஸ்ரீ நாராயண மிஷன்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ, 1965 ஆகஸ்ட் 9ல் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிவதைத் தொலைக்காட்சியில் அறிவித்த பின்னர்
அவ்வாண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பழைய ஸ்ரீ நாராயண மிஷன் கட்டடத்தில் முதல்முறையாக பொது இடத்தில் தோற்ற
மளித்தார். 313 செம்பவாங் டிரைவில் உள்ள அந்த பழைய கட்டடம் ஒரு நினைவுச் சின்னமாக
இன்றும் திகழ்கிறது.
75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'நேற்று, நாளை, இன்று' என்ற கருப்பொருளில் இம்மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட மரபுடைமை நடை, செம்பவாங் டிரைவ் நினைவுச்
சின்னத்திலிருந்து தொடங்கி, ஈசூன் அவென்யூ 6ல் கட்டப்பட்டு வரும் புதிய ஸ்ரீ நாராயண மிஷன் கட்டடத்தைக் கடந்து, ஈசூன் அவென்யூ 5ல் அமைந்துள்ள தற்போதைய ஸ்ரீ நாராயண மிஷன் கட்டடத்தில் நிறைவுெபற்றது.
ஸ்ரீ நாராயண மிஷன் 75
ஆண்டுகளைக் கடந்து வந்த பாதையையும் வளர்ச்சியையும் உறுப்பினர்களுக்கு நினைவூட்ட இந்த நடை ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார் அதன் நிர்வாக குழு துணைத் தலைவரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான திரு அனில் சரசி ஜாக்சன், 53.
தமது ஆறாவது வயதிலிருந்து ஸ்ரீ நாராயண மிஷனின்
தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டு வரும் திரு ராகவன் அசோகன், 70, இந்நடையில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார்.
சமூக சேவகராகப் பணிபுரிந்து வரும் ரஸினா ஷவுக்கத், 38, தனது தாத்தா ஸ்ரீ நாராயண மிஷனுடன் இணைந்து தொண்டூழியம் செய்ததால் தானும் அந்தப் பணியைத் தொடருவதாகத் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக வருகை அளித்த உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம், கேக் வெட்டி கொண்டாடி, ஸ்ரீ நாராயண மிஷனின் சாதனைகளை விளக்கினார்.
மரபுடைமை நடையில் பங்கேற்ற உறுப்பினர்கள். படம்: ஸ்ரீ நாரயண மிஷன்

