உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் அனைத்துலக யோகா தினத்திற்கு
வித்திட்ட நாடு இந்தியாதான்.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்ய யோகா தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி உரையாற்றிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21ஆம் தேதியை அனைத்துலக யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
ஜூன் 21ஆம் தேதி பூமியின் வட
அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் ஆகும். இதனை முன்னிட்டு இந்தியாவின் நிரந்தர ஐநா பொதுக்குழு உறுப்பினர் அசோக்
குமார் முகர்ஜி அதே ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்துலக யோகா தினத்திற்கான
வரைவு அறிக்கையை ஐநா சபையில் சமர்ப்பித்தார்.
இதற்கு அமெரிக்கா, கனடா, சீனா
உட்பட 177 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதன் மூலம் ஜூன் 21ஆம் தேதி அனைத்துலக யோகா தினம் என்று அதிகாரபூர்வமாக
ஐநா சபை மூலம் அறிவிக்கப்பட்டது.
அன்றைய நாளில் ஏராளமான பொது மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு களால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
வரும் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் பத்தாயிரம் பேர் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
யோகா தினத்தை முன்னிட்டு
சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையம்,
சில கடைத்தொகுதிகள், ஊழியர் தங்கும் விடுதிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் யோகாசன
நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
யோகா தினத்தன்று மற்றவர்களுடன் இணைந்து யோகாசனம் செய்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. படம்: கோப்புப்படம்

