சீனாவில் சமூக ஊடகங்களில் செல்வாக்காளர்களாக வலம் வந்து பல்லாயிரம் பேரால் பின்தொடரப் படுபவர்கள் இனி சட்டம், மருத்துவம் போன்ற தலைப்புகளில் கருத்துரைப்பதற்கு அவர்களுக்கு அத்துறையில் நிபுணத்துவ தகுதி இருப்பது அவசியம்.
சீன அரசாங்கம் இந்த புதிய விதிமுறைகளை சென்ற செவ்வாய்க்கிழமை 21ஆம் தேதி அறிவித்தது.
இணைய செல்வாக்காளர்களுக்கான நடத்தை விதிமுறைகளை சீனாவின் வானொலி, தொலைக்காட்சி நிர்வாகத் துறையும் கலாசார, சுற்றுப்பயண அமைச்சும் இணைந்து உருவாக்கின. இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும் தளங்களைப் பயன்படுத்துவோர் தங்கள் தகுதிச்சான்றிதழைக் குறிப்பிட்ட தளத்திடம் காட்டவேண்டும். அவை அவற்றை சரிபார்த்த பிறகே அவர்கள் அத்தளத்தைப் பயன் படுத்தி கருத்துரைக்க முடியும்.
சீனா அண்மைய ஆண்டுகளாக அதன் இணையத்தளத்தையும் ஊடகப் பிரபலங்களைப் பின்பற்றும் கலாசாரத்தையும் கட்டுப்படுத்த முயன்று வருகிறது.