பெண்கள் பூவிற்கு சமமானவர்கள். பூக்களைப் போன்று மென்மையானவர்கள். இன்றைய சூழலில் பெண்களுக்கு பூச்சூட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. பூக்கள் நம் மன அழுத்தத்தைக் குறைக்க வல்லன என்பதை அறிவியல் ரீதியாக உணர்ந்தே அந்தக் காலத்தில் நம் மூதாதையர்கள் பூக்களை சூடிக்கொண்டார்கள். வெளியே செல்லும்போது சூடாவிட்டாலும் வீட்டில் இருக்கும்போதாவது பூச்சுடுவோம்!
ஒவ்வொரு பூவுக்கும் ஒருவித பயன்பாடு உண்டு.
ரோஜாப்பூ: தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ: மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செண்பகப்பூ: வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ: காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப்பூ: தலைமுடி தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மகிழம்பூ: தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ: சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
தாழம்பூ: நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்தை வரவழைக்கும். உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ: தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மன உளைச்சலை நீக்கி மன அமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

