தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துகொண்டே இருந்தாலும் விபத்துகள் என்பது நடந்து
கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் பல இடங்களில் தீ
விபத்துகள் என்பது இன்றளவில் தவிர்க்க இயலாத ஒன்றாகி
விட்டது.
வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, வாகனம், அலுவலகம் ஆகியவற்றில் தீ விபத்து என்று தினமும் தீ தொடர்பான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருப்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றப்படுவார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நிறுவனம் தீயை அணைக்க 'elide ball' என்ற பந்து போன்ற பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது.
1.3 கிலோ எடையுள்ள இந்த பந்திற்குள் தீயை அணைக்கப் பயன்படும் ரசாயனக் கலவை நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
வீடு, அலுவலகம், வாகனம் ஆகியவற்றில் இந்தப் பந்தை முன்பே பொருத்தி வைத்திருந்தால், தீயின் வெப்பம் உணரும்போது பந்தில் இருந்து வெளியேறும்
ரசாயனக் கலவைத் தீயை
அணைத்துவிடும்.
இந்தப் பந்து வைக்காத இடத்தில் தீ பிடித்தால் பந்தைத் தூரத்தில் நின்று நெருப்பின் மீது வீசி எறிய வேண்டும்.
நெருப்பில் விழுந்த பந்தின் மேலுறை நெருப்பில் எரிந்ததும் உடனே பந்து உடைந்து அதில் இருந்து வெளியாகும் ரசாயனம் தீயை அணைத்து,
புகைமூட்டமாக்கி விடும்.
இந்தப் பந்து, நெருப்பு எரியும் இடத்தில் மட்டுமே வேலை செய்யும்.
நெருப்பு இல்லாத இடங்களிலும் கீழே தவறி விழுந்தாலும் இது உடையாது. பாதுகாப்பானது.