மொட்டுப்போல மலரும் முகம். மெட்டியால் மெட்டமைத்து சலங்கைகளால் கீதம் பாடும் பாதங்கள். இரண்டுமே பெண்ணின் பேரழகு மந்திரங்கள். பெண்கள் முக அழகிற்குக் காட்டும் அதே அக்கறையைப் பாதங்களைப் பராமரிப்பதிலும் காட்டவேண்டும்.
ஏன் தேவை?
பட்டுப்போன்ற பாதங்கள் நம் ஆரோக்கியத்தின் அளவுகோல். உடல் உறுப்புகளை இணைக்கும் வர்ம முடிச்சுகள் அத்தனையும் பாதங்களில் முடிகின்றன. பாதங்களை ஆரோக்கியமாகப் பராமரிப்பது, மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிப்பதற்கு சமம்.
முகத்தை அழகாக வைத்திருக்கும் பல பெண்கள் பாதங்கள் பரா
மரிப்பில் கவனம் செலுத்து
வதில்லை. வெளியில் சொல்லா
விட்டாலும் இது அவர்களின்
தன்னம்பிக்கையைப் பாதிக்கும்.
பாத வெடிப்பிற்குக் காரணம்
வெளியே செல்லும்போது பாதங்களில் அழுக்குப் படிகிறது. மேலும் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் பாதங்கள் வறண்டு வெடிப்புகள் உண்டாகின்றன. பாத வெடிப்புகளைக் கவனிக்காமல் விடுவதால் உடை உடுத்தும்போது சங்கடமாகவும் வெடிப்புகளால் கடுமையான வலியையும் ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தைக் கொடுக்கும். பாதங்கள் பராமரிப்பில் அழகு, ஆரோக்கியம் இரண்டுமே இணைந்துள்ளன.
தினமும் கடைப்பிடிக்க
வேண்டியவை:
பாதங்கள் பளிச்சிட அன்றாட வாழ்க்கை முறையில் சிலவற்றைச் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்்ந்த நீரால் காலை கழுவவேண்டும். வெறும் காலில் நடக்கும்போது அழுக்கும் ஈரமும் படாமல் இருக்க மென்மையான
காலணிகளை அணியலாம். குளித்தபின் ஈரப்பதம் உள்ள கிரீம்களை தடவலாம். வாரம் ஒரு முறை நம்முடைய பாதத்திற்கு நாமே எண்ணெய் தடவி மெதுவாக 'மசாஜ்' செய்யலாம். இது வலியைப் போக்கி, பாதங்களுக்குப் பொலிவூட்டும்.
மாதம் ஒருமுறை 'பெடிக்கியூர்'
பாதவெடிப்பு, கால் ஆணி, கால் நரம்பு சுருட்டிக்கொள்ளுதல் மற்றும் கணுக்கால் வலி உள்ளவர்கள் மாதம் ஒரு முறை 'பெடிக்கியூர்' செய்துகொள்வது நல்லது. முழங்கால் முதல் பாதம் வரை 'மசாஜ்' செய்யவேண்டும். 'பெடிக்கியூர்' செய்யும்போது இறந்த செல்கள் இயற்கையான முறையில் அகற்றப்பட்டு, பாதங்கள் மென்மையாகும். இதனால் காலில் ஆணி வருவது குறையும். மேலும் பாத எரிச்சல் மற்றும் வலியில் இருந்தும்
நிவாரணம் கிடைக்கும்.
பாத நரம்புகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் 'பெடிக்கியூர்' செய்
வதன் மூலம் பாத நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
'பெடிக்கியூர்' செய்வதால் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. பாதங்களின் 'மசாஜ்' செய்யும்போது உடல் உறுப்புகளின் மர்ம முடிச்சுகளை நீவிவிடுவதால் உடல் உறுப்புகளும் நல்ல ரத்த ஓட்டத்தைப் பெறும்.
நம் உடலின் மொத்த எடையையும் பாதங்களே தாங்குகின்றன. இதனால் பாதங்களை வெடிப்பு களின்றி பாதுகாப்பது மிகவும் அவசியம். பாதங்களின் வழியாக கிருமித் தொற்று ஏற்படுவதையும் இதன்மூலம் தடுக்கலாம்.
பாதங்களுக்கு அழகூட்ட
பாதத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க பாதங்களை உயர்த்துவது, நடப்பது என உடற்பயிற்சிகள் செய்யலாம்.
வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும்போது வெதுவெதுப்பாக சுட வைத்த எண்ணெய் தடவி 'மசாஜ்' செய்தபடி பார்க்கலாம்.
வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்புடன் எலுமிச்சைச் சாறைக் கலந்து அதில் கால்களை நனைத்தபடி உட்கார்ந்திருக்கலாம்.
வாரத்திற்கு இரண்டு முறை எலுமிச்சைத் தோலை பாதங்களில் தேய்த்து சில
நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவலாம். அதனால் நகங்களுக்கு இடையே இருக்கும் அழுக்கு நீங்கும். பாதங்களும் நகங்களும் பளிச்சிடும்.
பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை
விழுதுபோல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
உருளைக்கிழங்கைச் சிறு
துண்டுகளாக வெட்டி, காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மின்னும்.
தினமும் குளிக்கும்போது பாதத்தை நன்றாக 5 நிமிடம் தேய்த்து பிடித்து விட்டாலே பாதங்கள் மிருதுவாகி விடும்.
அழகுப் பாதங்களால் உங்களின் தன்னம்பிக்கை மேம்படும். பெண்களே பாதங்களைப் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

