உறவுகளுக்கும் உரம்போடும் சமூகத் தோட்டங்கள்

உறவுகளுக்கும் உரம்போடும் சமூகத் தோட்டங்கள்

2 mins read
216177f3-03aa-463c-a8e2-4fcb0f12c38d
கிம் தியன் வெஸ்ட் வட்டாரவாசிகள் (இடம்) திருமதி உமா செல்லம், 59, அவரின் மாமியார் திருமதி சாரதா செல்லம், 97, தங்கள் வட்டாரச் சமூகத் தோட்டத்தில் விளைந்த லெட்யூஸ் கீரைகளைச் சேகரிக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செடி­க­ளு­டன் நட்­பும் மல­ரும் இட­மாக சிங்­கப்­பூ­ரி­லுள்ள சமூ­கத் தோட்­டங்­கள் உரு­வாகி வரு­கின்­றன. சிங்­கப்­பூ­ரில் 1,700க்கும் மேற்­பட்ட சமூ­கத் தோட்­டங்­கள் இருக்­கின்­றன என்று உங்­க­ளுக்­குத் தெரி­யுமா?

தோட்­டக்­க­லை­யில் ஆர்­வ­முள்­ள­வர்­கள் சமூ­கத் தோட்­டங்­களை நாடு­கின்­ற­னர். அங்­கு தங்­க­ளைப் போன்ற பிற தோட்­டக்­கலை ஆர்­வ­லர்­க­ளைச் சந்­திக்­கின்­ற­னர். இந்த ஒரு­மித்த ஆர்­வமே புதிய நட்­புக்கு விதை­யாக அமைந்­து­வி­டு­கிறது.

மேலும், இயற்­கை­யு­டன் நெருங்­கி­ய தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் சமூ­கத்­தி­ன­ரு­டன் கலந்­து­ற­வா­ட­வும் சமூ­கத் தோட்­டங்­கள் வாய்ப்­ப­ளிக்­கின்­றன.

அது­மட்­டு­மல்ல, ஒரு­வர் உட்­கொள்­ளக்­கூ­டிய பயிர்­க­ளை­யும் சமூ­கத் தோட்­டங்­களில் விதைக்க முடி­கிறது. வச­தி­கு­றைந்த குடும்­பங்­க­ளுக்கு அவர்­க­ளின் வட்­டா­ரச் சமூ­கத் தோட்­டங்­களில் விளைந்த பழங்­க­ளை­யும் காய்­க­றி­க­ளை­யும் வழங்­கும் திட்­டம் ஒன்­றும் நடப்­பில் உள்­ளது.

அரிய, கவர்ச்­சி­யான பறவை வகை­க­ளை­யும் பட்­டாம்­பூச்­சி­க­ளை­யும் இச்­சிறு சிறு இயற்கை வனங்­கள் ஈர்ப்­ப­தை­யும் நம் குடி­யி­ருப்­பு­களில் அண்­மைய கால­மாக அதி­கம் காண முடி­கிறது.

'சமூ­கத் தோட்­டக்­க­லைத் திட்­டம்' என்ற நாட­ளா­விய தோட்­டக்­கலை இயக்­கம் 2005ஆம் ஆண்டு மே மாதத்­தில் தொடங்­கி­யது முதல் 40,000க்கும் மேற்­பட்ட தோட்­டக்­கலை ஆர்­வ­லர்­கள் இத்திட்­டத்­தின் கீழ் இணைந்­து­விட்­ட­னர்.

ஒரே குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் வெவ்­வேறு பிரி­வி­னர், வெவ்­வேறு குடும்­பப் பின்­ன­ணி­க­ளைக் கொண்­ட­வர்­க­ளாக வசிக்­கின்­ற­னர். தங்­கள் வட்­டா­ரச் சமூ­கத் தோட்­டத்தை உரு­வாக்கி, வடி­வ­மைத்து, அதைப் பரா­ம­ரிப்­ப­தில் ஒன்­றிணைந்து செயல்­ப­டு­கின்­ற­னர்.

தோட்­டக்­க­லை­யைப் பற்றி அறிந்­தி­ரா­த­வ­ரும் பிறர் மூலம் விழிப்­பு­ணர்வு பெறும் வாய்ப்பு கிடைக்­கிறது. சமூ­கத்­திற்­கும் நாட்­டுக்­கும் பங்­காற்­று­கி­றோம் என்ற எண்ணமும் வளர்­கிறது.

அறி­வு­சார் குறை­பா­டு­கள் உள்­ள­வர்­க­ளுக்­குச் சமூ­கத் தோட்­டம் போன்ற சமூக வச­தி­களில் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தரும் திட்­ட­மும் கடந்த ஆண்டு தொடங்­கப்­பட்­டது.

பூக்­கள், காய்­க­றி­கள், மசாலா பொருள்­கள், பழங்­கள் என ஒட்­டு­மொத்த சிங்­கப்­பூ­ரையே ஒரு பெருந்­தோட்­ட­மாக உரு­மாற்­றும் வகை­யில் இச்­ச­மூ­கத் தோட்­டங்­கள் பங்­காற்று­கின்­றன.

அண்­டை­வீட்­டார், வேலை நண்­பர்­கள், தோழர்­கள் ஆகி­யோர் சமூ­கத் தோட்­டங்­களில் கூடி இத்­தகைய அர்த்­த­முள்ள நட­வ­டிக்­கை­யில் ஈடு­படும் அனு­ப­வங்­களும் மறக்க முடி­யா­தவை. குறிப்­பாக, நம் பல்­லின சமு­தா­யத்­தில் ஒத்­துழைப்பு, தொண்­டூ­ழி­யம், பன்­முகத்­தன்­மைக்கு மதிப்பு, சுற்­றுச்­சூ­ழல் விழிப்­பு­ணர்வு ஆகி­ய­வற்­றின் முக்­கி­யத்­து­வத்­தைச் சமூ­கத் தோட்­டங்­கள் உணர்த்­து­கின்­றன.

செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்,

தேசிய பூங்காக் கழகம்