கண் பேசும் நோயை அறிந்திடுங்கள்

கண் பேசும் நோயை அறிந்திடுங்கள்

2 mins read
f131de45-34b0-4695-be85-3b4cbc12f93d
-

மனத்­தி­ரை­யில் இருப்­பதை நம் கண்­களே காட்­டிக்­கொ­டுத்­து­வி­டும் என்­பார்­கள். ஆனால் ஒரு­வ­ரது ஒட்­டு­மொத்த சுகா­தா­ரத்தை மேலும் நன்­றா­கப் புரிந்­து­கொள்­வ­தற்­கும் அதே கண்­கள் உத­வு­கின்­றன.

வயது கார­ணத்­தால் கண்­பார்­வைக் கோளா­று­க­ளுக்கு இட்­டுச் செல்­லும் அறி­கு­றி­களை நம் கண்­கள் ஆரம்ப காலத்­திலேயே காட்­டி­வி­டும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதற்கு ஒரு சிறு சோத­னை­யைச் செய்து பார்க்க முடி­யும் என்­கின்­ற­னர்.

ஒரு கதவு அல்­லது சன்­னல் சட்­டத்தை நேரே நின்று பார்த்­த­வாறு கையால் ஒரு கண்ணை மூடிக்­கொள்ள வேண்­டும். பின்­னர் கையை அகற்றி மறு கண்ணை மூட வேண்­டும். இதைப் பல­முறை செய்­து­கொண்டே இருங்­கள்.

"உங்­கள் பார்வை தெளி­வாக இல்­லா­மல் மங்­க­லா­கவோ இடை­வெ­ளி­கள், வரி­களு­டனோ தெரிந்­தால் உடனே கண்­களைச் சோதித்­துப் பாருங்­கள். கண் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு இது ஆரம்ப அறி­குறி­கள்," என்­கி­றார் கண்­பார்வை நிபு­ணர் சுஜாதா பால். 'கார்­னியா' எனப்­படும் விழி வெண்­ப­ட­லத்­தில் வெள்­ளைப் புள்­ளி­கள் இருந்­தால் அவை எச்­ச­ரிக்கை விடுக்­கும் அறி­கு­றி­க­ள். உடனே கண் மருத்­து­வ­ரி­டம் செல்ல வேண்­டும்.

சில சம­யங்­களில், நம் கண் துடிப்­பது போன்­றி­ருக்­கும். களைப்பு மிகுதி இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம். அத்­து­டன் அள­வுக்கு அதி­க­மான மது­பா­னம், காப்பி, சிக­ரெட் போன்­ற­வற்­றா­லும் கண் இவ்­வாறு துடிக்­க­லாம். ஓய்வு எடுக்­க­வும் வேலைப்­பளு­வைக் குறைத்­துக்­கொள்­ள­வும் உங்­கள் உடல் கூறு­வ­தாக அமைந்த அறி­குறி இது என்­கி­றார் அவர். அதே­போன்று கண்­கள் வீக்­கத்­து­டன் சிவந்­த­படி இருந்­தால் அது ஒவ்­வாமை கார­ண­மா­கவோ களைப்பு கார­ண­மா­கவோ இருக்­க­லாம் என்­கி­றார்.

கண்­பார்வை மங்­க­லா­கும்­போது நீரி­ழிவு நோய், கண்­புரை போன்­ற­வற்­றுக்­கான அறி­கு­றி­யா­க­வும் இருக்­க­லாம். ரத்­தத்­தில் அதி­க­மான இனிப்பு அளவு இருக்­கும்­போது விழித்­தி­ரை­யின் ரத்த நாளங்­கள் பாதிக்­கப்­படும். பின்­னர் அவை வீக்­க­ம­டைந்து ரத்­தம் கசி­ய­லாம். அத­னால் கண்­பார்வை மங்­க­லா­கும் வாய்ப்பு உள்­ளது.

விழி வெண்­ப­ட­லத்­தைச் சுற்றி வளை­யங்­கள் தெரிந்­தால் ரத்­தத்­தில் அதி­கக் கொழுப்பு இருப்­ப­தற்கு அவை அறி­கு­றி­களாக இருக்­க­லாம். கொழுப்­புப் படி­வு­கள் உரு­வாகி விழி வெண்­ப­ட­லத்­தைச் சுற்றி ஒரு வளை­ய­மா­வது, ரத்­தத்­தில் அதி­கக் கொழுப்பு இருப்­ப­தற்­கான ஆரம்ப அறி­குறி என்­றார் சுஜாதா.

சில நேரங்­களில் ஏதோ புழு போன்ற வடி­வத்தை நாம் பார்த்­தி­ருக்­க­லாம். அதைப் பற்­றிக் கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை.

ஆனால் ஒரு­வித வெளிச்­ச­மும் தோன்றி பெரிய புழுக்­கள் போன்ற வடி­வங்­கள் மிதப்­ப­தைக் கவ­னித்­தால், அது அபா­ய­க­ர­மா­னது. இத்­து­டன் அவ்­வப்­பொ­ழுது கண்­பார்வை தெரி­யாத நிலை­யும் சேர்ந்­து­கொண்­டால் விழித்­திரை பிரச்சினைக்கான அறி­கு­றி­யாக இது இருக்­க­லாம். உடனே இதைக் கவ­னிக்­கா­விட்­டால் நிரந்­த­ர­மா­கப் பார்­வையை இழக்க நேரி­டும் என்­கின்­றனர் மருத்­துவ நிபு­ணர்­கள்.