உலகையே வாட்டி வதைத்த கொரோனா தொற்றுநோய் இப்போது ஓய்ந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டு காலமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள் சிறகை விரித்துப் பறக்கத் தொடங்கியுள்ளனர்.
உல்லாசப் பயணிகள் விரும்பிச் செல்லும் நாடுகளில் சிலவற்றில் ஆங்கிலம் பேசுபவர்கள் இருந்தாலும் பல நாடுகளில் அவர்களின் தாய்மொழி மட்டுமே பேசப்படுகிறது.
இந்நிலையில், கூகல் நிறுவனத்தின் மெட்டா நிறுவனம் தனது சக்திவாய்ந்த மொழிபெயர்ப்புக் கருவிக்கு மேலும் வலுவூட்டியுள்ளது.
உலகில் பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட 200 மொழிகளின் தரவுகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விரிவான மொழிபெயர்ப்புக் கருவியை உருவாக்க, தனது நட்பு நிறுவனங்களுடன் கைகோத்து கடுமையாகப் போராடி வருகிறது.
கூகலின் இந்தப் பெருந்திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்று அந்த சக்திவாய்ந்த மொழிபெயர்ப்புக் கருவி விரைவில் பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.
2016ஆம் ஆண்டு கூகல் வெளியிட்ட தனது மொழிபெயர்ப்புக் கருவியில் உள்ள குறை நிறைகளைக் களைந்து 200 மொழிகள் பயன்படுத்தும் வகையிலான பெரும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஓர் அகராதியைப்போல் அப்படியே மொழிபெயர்த்துக் கொடுக்காமல் அந்தந்த மொழிக்கே உள்ள தனிப்பண்பு மாறாமல் வாக்கியங்கள் அமைக்கும் முறையை தனது மொழிபெயர்ப்புக் கருவியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆழமான கற்றலிலும் ஆய்விலும் கூகலின் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கூகல் தற்போது கொண்டுள்ள மொழிபெயர்ப்புக் கருவியும் பல மொழிகளில், நன்முறையில் மொழிபெயர்த்துத் தருகிறது. சில மொழிகளில் மனித மொழிபெயர்ப்பாளருக்கு இணையாக வாக்கியங்களை அழகாக அமைத்துக் கொடுப்பதாகத் தெரியவருகிறது.
கூகலின் இப்போதுள்ள மொழிபெயர்ப்புக் கருவியின் வளங்களைச் சேர்த்து சக்திவாய்ந்த, விரிவான மொழிபெயர்ப்புக் கருவியை உருவாக்கும் பணியில் கூகலின் தாய் நிறுவனமான மெட்டா இறங்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், 200 மொழிகளுக்கு இடையே 40,000க்கு மேற்பட்ட முறையில் சோதித்துப்பார்க்கப்பட்டதாகத் தெரிவித்தது.
கூகல் நிறுவனம் மெட்டா மற்றும் மேலும் சில தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுத் தரவுகளை மாதிரிகளைக் கொண்டு உலகின் எண்ணற்ற மொழி பேசுபவர்களை மாபெரும் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதனை மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் கடந்த புதன்கிழமை அறிவித்தார்.
கிட்டத்தட்ட 200 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புத் தரவுகள் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளதாக திரு மார்க் ஸக்கர்பெர்க், அறிவித்தார்.
இந்த இருநூறு மொழி பேசுபவர்களும் ஒருவருக்கொருவர் தாங்கள் பேசும் மொழியிலேயே உரையாடிக்கொள்ளலாம்.
2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தத் திட்டம். ஏற்கெனவே இருந்த வசதிகளை கடந்த இரண்டாண்டுக்குள் இரட்டிப்பாக்கியுள்ளதாக திரு ஸக்கர்பெர்க் தெரிவித்தார்.
இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலான மொழிபெயர்ப்புக் கருவி தயாரான பின், ஆங்கில மொழியின் புழக்கமும் ஆதிக்கமும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலம் அல்லாத எந்தவொரு மொழியின் உரையையும் எந்தவொரு மொழியிலும் மொழிபெயர்ப்பதை இந்தக் கருவி சாத்தியமாக்கியுள்ளது.
அதற்கு ஆங்கிலம் முற்றிலும் தேவைப்படாத நிலை உருவாகும். உதாரணத்திற்கு பிரஞ்சுக்காரர்களும் சீனர்களும் தத்தம் மொழியிலேயே உரையாடிக்கொள்ளலாம்.