குழந்தைப் பருவத்துக்கும் பெரியவராவதற்கும் இடையிலான பாலமாக பதின்மவயது விளங்குகிறது. இந்த வயதில் பல புதிய சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்
படுவதுண்டு.
சில சமயங்களில் சவால்கள் தரும் பாரத்தைப் பதின்மவயதினரால் சமாளிக்க முடியாமல் போக்கக்கூடும். கல்வி, குடும்பம், நண்பர்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை தொடர்பான மனவுளைச்சல்கள் அவர்களுக்குத் தாங்க முடியாத நெருக்கு தலையும் வேதனையையும் ஏற்படுத்தக்
கூடும். எனவே அவர்களது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து வழிகாட்டுவது பெரியவர்களின் தலையாய கடமையாகும்.
குடும்பத்தில் உள்ள பதின்மவயதினரின் நலனில் தங்களுக்கு அக்கறை உள்ளது என்பதைப் பெரியவர்கள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களிடம் பாசமாக இருக்க வேண்டும். பதின்ம
வயதினர் கூறும் யோசனைகளைக் காது கொடுத்து கேட்க வேண்டும். நல்ல
யோசனைகளாக இருந்தால் மனதாரப் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பது முக்கியம். பதின்மவயதினருடன் குடும்பமாக
ஒன்றிணைந்து நேரத்தைச் செலவிடுவது நன்மை பயக்கும். அப்போது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். தங்கள் ஆதரவு எப்போதும் அவர்களுக்கு உண்டு என அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

