பன்னாட்டுத் தமிழ்ச் சிறுகதைகள் எனும் தொகைநூல் ஐந்து கண்டங்களில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் விவரிக்கிறது.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஆறு கதைகள் இந்நூலில் உள்ளன. எஞ்சிய 12 கதைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி இந்நூலின் தொகுப்பாசிரியர்.
இதன் வாயிலாக உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருசேர வாசிக்கும் வாய்ப்பு வாசகர்களுக்குக் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வெளியீடு கண்ட இந்நூல், இம்மாதம் ஒன்பதாம் தேதி சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. நூலைப் பெற விரும்புவோர் முனைவர் ஸ்ரீலஷ்மியைத் தொடர்புகொள்க: 91014612, lakshmishri00@gmail.com.

