புதிய கைபேசி அல்லது கைகணினியை வாங்கிவிட்டீர்கள். பழையதை வீச வேண்டும். ஆனால் அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட வேண்டாம்.
பழைய, வேண்டாத மின்னியல் சாதனங்களை வீசும்போது கவனம் முக்கியம். மின்கலம் இருப்பதால், கைபேசிகள், கைக்கணினிகள், தொலைக்காட்சிப் பேழைகள், கணினிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட மின்னியல் சாதனங்களைக் குப்பைத் தொட்டியில் வீசக்கூடாது.
இந்தச் சாதனங்களில் ஆபத்து ஏற்படுத்தும் கழிவுகள் என்று வகைப்படுத்தப்பட்ட நச்சுத்தன்மை உள்ள இரும்புகள் இருக்கக்கூடும் என்பதே அதற்குக் காரணம்.
வேண்டாத மின்னியல் சாதனங்களைப் பாதுகாப்பாக வீசுவது சுற்றுச்சூழல் கேட்டையும் குறைக்கும். மின்னியல் சாதனங்களை முறையாகக் கழிக்கும்போது அவற்றில் உள்ள கண்ணாடி, இரும்பு போன்றவற்றை மறுபயனீடு செய்யலாம்.
சிங்கப்பூரில் மின்னியல் கழிவுகளை வீச பல வழிகள் உண்டு. பொது இடங்கள், கடைத்தொகுதி கள், சமூக மன்றங்கள், போன்றவற்றில் மறுபயனீட்டுத் தொட்டிகள் ைக்கப்பட்டுள்ளன.
மின்னியல் சாதனங்களை விற்கும் பெரிய கடைகளில் அவற்றை வீசுவதற்கான தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
சில நகர மன்றங்களும் அவ்வப்போது மின்னியல் கழிவுகளைப் பெற்றுக்கொள்கின்றன.
சிங்கப்பூரில் மின்கழிவுகளை ஒப்படைக்கும் இடங்களைக் காண: https://www.nea.gov.sg/our-services/waste-management/3r-programmes-and-resources/e-waste-management/where-to-recycle-e-waste

