நாள்பட்ட நோய்க்கு ஆளானபோதும் தான் அதீத காதல் கொண்ட ஓவியக் கலையைக் கைவிடலில்லை திருவாட்டி பெலிண்டா லோ. 64 வயதான இவரின் இரண்டு ஓவியங்கள் உள்பட ஒன்பது ஓவியங்கள் கிரேத்தா ஆயரில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
பின்னணியில் மரினா பே பகுதி. அங்கு மீன் சூப் விற்கும் கடையும் ஒரு குடும்பமும் இடம்பெறும் ஓவியம் திருவாட்டி லோவின் படைப்புகளில் ஒன்று.
பல வார இறுதிகளில் அயராது உழைத்து இவர் தனது ஓவியங்களை உருவாக்கினார்.
தேசிய தினத்தையொட்டி சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்பையும் முக்கிய இடங்களையும் சித்திரிக்க இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒன்பது ஓவியர்களுடன் 200க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள், தொண்டூழியர்கள் சமூகப் பங்காளிகள் ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

