கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளான பலரிடையே தொண்டை வலிதான் முக்கிய அறிகுறியாக இருப்பதென பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒருவருக்குத் தொண்டை வலி இருந்தால் அவருக்கு சளிக்காய்ச்சல் இருப்பதைவிட கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியபோது சுவை, மணம் ஆகிய இரு உணர்வுகளும் இல்லாமல் போவது, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் பலரிடையே காணப்பட்டன. இப்போது அவை அரிதாகிவிட்டதாக 'ஸோயி' சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருவருக்கு சளிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருப்பதற்கான வாய்ப்புகள் இரு மடங்கு அதிகம் என்று 'ஸோயி' அமைப்பின் துணை நிறுவனரான டாக்டர் டிம் ஸ்பெக்டர் கூறினார்.
நோய்க்கான ஒவ்வொரு அறிகுறிக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்பின் விகிதத்தையும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
தொண்டைவலி - 58 விழுக்காடு
தலை வலி - 49 விழுக்காடு
மூக்கடைப்பு - 40 விழுக்காடு
சளியில்லாத இருமல் - 40 விழுக்காடு
மூக்கிலிருந்து நிற்காமல் சளி வருவது
- 40 விழுக்காடு
சளியுடன் இருமல் - 37 விழுக்காடு
மங்கலான குரல் - 35 விழுக்காடு
தும்மல் - 32 விழுக்காடு
சோர்வு - 27 விழுக்காடு
தசைவலி - 25 விழுக்காடு
தலை சுற்றுவது - 18 விழுக்காடு
கழுத்தின் சில பகுதிகளில் வீக்கம்
- 15 விழுக்காடு
கண்வலி - 14 விழுக்காடு
மணம் உணர்வதில் பாதிப்பு
- 13 விழுக்காடு
இதயவலி - 13 விழுக்காடு
காய்ச்சல் - 13 விழுக்காடு
குளிரால் நடுக்கம் - 12 விழுக்காடு
மூச்சுத் திணறல் - 11 விழுக்காடு
காதுவலி - 11 விழுக்காடு
மணம் உணர்வு இல்லாமல் போவது
- 10 விழுக்காடு