பித்தக்கல் பாதிப்பு அதிகரிப்பு

பித்தக்கல் பாதிப்பு அதிகரிப்பு

2 mins read
dd8dccbd-cb35-4a06-8837-1004898266c0
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் போதிய உடற்பயிற்சி இல்லாததுமே சிங்கப்பூரில் பித்தக்கல் பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். படம்: இணையம் -

அம்­ரிதா கௌர்

அடி­வ­யிற்­றுப்­ப­கு­தி­யில் திடீ­ரென வலி ஏற்­ப­டு­கி­றதா? கண்­டு­கொள்­ளா­மல் இருந்­து­விட வேண்டாம். அவ்­வலி பித்­தக்­கல்­லால் ஏற்­ப­டு­வதாக இருக்­க­லாம்.

சிங்­கப்­பூ­ரில் பித்­தக்­கல் பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர். அண்­மைய ஆண்­டு­களில் அந்த பாதிப்பு 10 முதல் 15 விழுக்­காடு கூடி­யுள்­ளது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்­பு­கொண்ட மருத்­து­வர்­கள் மூவர் தெரி­வித்­த­னர்.

கடந்த 2020ஆம் ஆண்­டை­விட 2021ஆம் ஆண்­டில் இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­ம­னை­யில் பித்­தப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்­து­கொண்ட நோயாளி­க­ளின் எண்­ணிக்கையும் 50% கூடி­யது.

மக்­கள்­தொ­கைப் பெருக்­கம், மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை, ஆரோக்­கி­ய­மற்ற வாழ்க்­கை­முறை, கொழுப்­புச்­சத்து நிறைந்த உணவை அதி­கம் உட்­கொள்­வது, போதிய உடற்­ப­யிற்­சி­யின்மை ஆகி­யவை பித்­தக்­கல் பாதிப்பு அதி­க­ரிப்­பிற்­கான கார­ணங்­க­ளாக இருக்­க­லாம் என்று அம்­ம­ருத்­து­வ­மனை­யைச் சேர்ந்த டாக்­டர் தங் யோங்­சி­யான் கூறி­னார்.

பொது­வாக, செரி­மா­னத்­திற்கு உத­வும் பித்­த­நீ­ரில் அதி­கப்­ப­டி­யான கொழுப்பு இருக்­கும்­போது பித்­தப்­பை­யில் கல் உரு­வா­கும். அந்த மிகைக்­கொ­ழுப்பே கற்­க­ளாக மாறும். அக்­கற்­கள் ஒரு சிறு துகள் அள­வி­லும் இருக்­க­லாம்; கோல்ஃப் பந்து போன்று பெரி­தா­க­வும் இருக்­க­லாம்.

பித்­தக்­கற்­கள் உரு­வா­கும்­போது பெரும்­பா­லும் அறி­குறி தெரி­யாது. அதற்கு சிகிச்­சை­யும் தேவைப்­ப­டாது. ஆனால், அக்­கற்­கள் பித்­த­நீர் நாளங்­களை அடைத்­துக்­கொண்­டால், திடீ­ரென வலியை ஏற்­ப­டுத்­த­லாம். அப்­போது மருத்­துவ உதவி தேவைப்­படும்.

பித்­தப்­பை­யில் கற்­கள் உரு­வா­வது அடி­வ­யிற்­றில் வலி, காய்ச்­சல், குமட்­டல், வாந்தி, மஞ்­சள் காமாலை, பசி­யின்மை போன்ற அறி­கு­றி­களை ஏற்­ப­டுத்­தும்.

பித்­தக்­கற்­கள், சிறு­நீ­ர­கக் கற்­களில் இருந்து வேறுபட்­டவை. கால்­சி­யம் ஆக்­ச­லேட் என்ற வேதிப்­பொ­ரு­ளும் யூரிக் அமி­ல­மும் சேர்ந்து உரு­வா­கும் சிறு படி­கங்­களே சிறு­நீ­ர­கக் கற்­கள்.

பொது­வாக, 40 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களே பித்­தக்­கற்­க­ளால் பாதிக்­கப்­ப­ட­லாம் என்­றா­லும் 20, 30 வய­து­க­ளி­லும் அந்­நோ­யா­ளி­களைக் கண்­டுள்­ள­தாக டாக்­டர் டான் சொன்­னார்.

"ஆரோக்­கி­ய­மற்ற வாழ்க்­கை­மு­றை­யால் அவர்­கள் அதிக உடல் எடை­யு­டன் இருக்­க­லாம். பெரும்­பா­லும் அவர்­க­ளது உட­லில் அதி­கக் கொழுப்பு இருக்­கும். அது பித்­தக்­கல் உரு­வாக வழி­வ­குக்­கும்," என்­றார் அவர்.

பித்­தக்­கல் நோயா­ளி­யான திரு­வாட்டி ஷேரன் டான், 36, 1.57 மீட்டர் உய­ர­மும் 68 கிலோ எடை­யும் கொண்­ட­வர். இது அதிக உடல் எடை­யா­கக் கருதப்­ப­டு­கிறது.

பித்­தக்­கல் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­பின் அவர் பொரித்த உண­வை­யும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வை­யும் தவிர்த்­தார். இப்­போது, அதி­கப் பழங்­களும் காய்­க­றி­களும் இருக்­கும் வகை­யில் சரி­வி­கித உணவை அவர் உட்­கொள்­கி­றார்.

பெரும்­பா­லான பித்­தக்­கற்­கள் மீயொலி (ultrasound) பரி­சோ­தனை மூல­மா­கக் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன. பித்­தக்­கல் பாதிப்பு அறி­குறி இருப்­போர் பெரும்­பா­லும் பித்­தப்பை நீக்க அறுவை சிகிச்­சையை நாடு­வ­தாக கிள­னீ­கல்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் இரைப்­பைக் குட­லி­யல் மருத்­து­வர் அமி­தாப் மோங்கா கூறி­னார்.

பித்தப்பை இல்லாமல் ஒருவர் உயிர்வாழ முடியும். அத்தகைய நிலையில், கல்லீரல் பித்தநீரைச் சுரந்து, நேரடியாக சிறுகுடலுக்குள் தள்ளிவிடும்.

நார்ச்­சத்து மிகுந்த, மாவுச்­சத்து, சர்க்­கரை, நிறை­வுற்ற கொழுப்பு குறைந்த உண­வு­களை உட்­கொள்­வதா­லும் உடற்­ப­யிற்சி செய்­வதை வழக்­க­மா­கக் கொள்­வ­தா­லும் பித்­தக்­கல் உரு­வா­கா­மல் தடுக்­க­லாம் என்­பது மருத்­து­வர்­க­ளின் அறி­வுரை.