குறைந்த வருமான ஊழியர்களுக்கு உதவும் திட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம்

குறைந்த வருமான ஊழியர்களுக்கு உதவும் திட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படம்

2 mins read
146c9fd7-4f33-4957-a011-a7b1e50b4b5c
'ஒன்றிணைந்த சிங்கப்பூர்' இயக்கத்தின் மூன்றாமாண்டு நிறைவுவிழாவில் வெளியிடப்பட்ட நான்கு குறும்படங்களின் இயக்குநர்களுடன் அமைச்சர் இந்திராணி ராஜா (நடுவில்). இடமிருந்து 2வதாக இருப்பவர் 'நெவர் டூ லேட்' படத்தின் இயக்குநர் விஷாலி பன்ச். படம்: சாவ் பாவ் -

'ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர்' இயக்­கத்­தின் மூன்­றா­மாண்டு நிறை­வு­வி­ழா­வில் திரை­யி­டப்­பட்ட நான்கு குறும்­ப­டங்­க­ளுள் திரு­வாட்டி விஷாலி பஞ்ச், 37, இயக்­கிய 'நெவர் டூ லேட்' பட­மும் ஒன்று.

ஊட­கத்­து­றை­யில் 20 ஆண்­டு­கால அனு­ப­வம் பெற்­றுள்ள திரு­வாட்டி விஷா­லிக்கு, அவர் இயக்­கிய முதல் குறும்­ப­டமே பொருள் பொதிந்த நட­வ­டிக்­கைக்­காக அமைந்­த­தில் பெரு­ம­கிழ்ச்சி.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் ஊழி­யர்­க­ளுக்கு உதவ முனை­யும் கர்­ணன் என்ற மேலா­ளரை முக்­கி­யக் கதா­பாத்­தி­ர­மா­கக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டது 'நெவர் டூ லேட்' குறும்­ப­டம்.

மனி­த­வள அமைச்­சின் முயற்சி­களை எடுத்துக்காட்டும் வகை­யிலான குறும்­ப­டத்தை இயக்­கும் பொறுப்பு தமது திரைப்­ப­டக் குழு­வி­டம் வழங்­கப்­பட்­டதை அடுத்து, முத­லில் அவ்­வ­மைச்­சின்கீழ் வரும் திட்­டங்­க­ளைப் பற்றி அக்­குழு ஆராய்ந்­தது.

அவற்­றுள், குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்கு உத­வி­வ­ரும் 'உளச்­சான்று நிறு­வ­னங்­கள் (Organisations of Conscience)' எனும் திட்­டம் உன்­ன­த­மான முயற்­சி­யாக அவர்­க­ளுக்­குத் தோன்­றி­யது. அத­னைத் தொடர்ந்து, அத்­திட்­டத்­தின் தலை­வர் திரு கார்த்தி­கே­யன் ராம­கி­ருஷ்­ண­னு­டன் உரை­யா­டிய பின்­னர், தம் கதா­சி­ரி­ய­ரு­டன் சேர்ந்து குறும்­ப­டத்­திற்­கான கதையை எழு­தத் தொடங்­கி­னார் திரு­வாட்டி விஷாலி.

சிறு­வ­யது அனு­ப­வங்­களே ஒரு­வ­ரின் குண­ந­லன்­க­ளைத் தீர்­மா­னிக்­கின்­றன என்று நம்­பும் திரு­வாட்டி விஷாலி, குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் ஒரு­வ­ரின் மகன், தானும் தன் தந்­தை­யும் பட்ட துன்­பங்­க­ளைப் பிறர் அனு­ப­விக்­கக்­கூடாது என்ற எண்­ணத்­தில் எடுக்­கும் முயற்­சி­க­ளைக் கதைக்­க­ரு­வாக தேர்வு செய்­தார்.

தெமா­செக் கடை வீடு கட்­ட­டத்­தில் நேற்று முன்­தி­னம் திரை­யி­டப்­பட்ட 'நெவர் டூ லேட்' குறும்­ப­டத்­தில் திற­மை­யான நடி­கர்­கள் நடித்­தி­ருந்­த­னர். அத்­து­டன், உணர்ச்­சி­மிகு பின்­னணி இசை­யும் சுவா­ர­சி­ய­மான பின்­னோக்கு உத்­தி­யும் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா, கடந்த மூன்று ஆண்­டு­களாக 'ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர்' இயக்­கத்­திற்­கா­கப் பங்­காற்றி வரு­வோ­ருக்­கும் தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

துணைப் பிர­த­ம­ரும் நிதி­ அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் சென்ற மாதம் அறி­மு­கப்­ப­டுத்­திய 'முன்­னே­றும் சிங்­கப்­பூர்' இயக்­கத்­தில் இணைந்து, முன்­வந்து பணி­ ஆற்­றும்­படி இக்­கு­றும்­ப­டங்­கள் சிங்கப்­பூ­ரர்­களை ஊக்­கு­விக்­கும் என்றும் குமாரி இந்­தி­ராணி ராஜா நம்­பிக்கை தெரி­வித்­தார்.