தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, உயர்கல்வி மாணவர்களுக்கான தேசிய அளவிலான பரதநாட்டியப் போட்டிக்கு தோ பாயோ வெஸ்ட் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருக்கிறது.
'பரதம் 2022' பாரம்பரிய நடனப் போட்டியின் இறுதிச்சுற்று தோ பாயோ வெஸ்ட் சமூக மன்ற பன்னோக்கு அரங்கில் நாளை மறுநாள் 23ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணியில் இருந்து இரவு 8 மணிவரை இடம்பெற உள்ளது.
தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, உயர்கல்வி ஆகிய மூன்று பிரிவுகளிலும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியோர், உள்ளூர், வெளிநாட்டு நடுவர்கள் முன்னிலையில் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்துவர்.
வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
கூடுதல் விவரங்களுக்கு 9489 8272, 9145 4375, 9455 1255 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

