ஈராண்டுக்குப் பிறகு மீண்டும் இடம்பெறவிருக்கிறது சிங்கப்பூர் இரவுத் திருவிழா.
அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பிராஸ் பாஸா-பூகிஸ் வட்டாரத்தில் இது நடைபெறும். மறுபிறப்பு எனப் பொருள்படும் ‘ரீபர்த்’ என்பது 13வது முறையாக நடைபெறும் இவ்விழாவின் கருப்பொருள்.
கொவிட்-19 நோய்ப்பரவலின் தாக்கத்திலிருந்து சிங்கப்பூர் மீண்டுவந்துள்ள நிலையில் இது பொருத்தமான கருப்பொருள் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
தேசிய மரபுடைமைக் கழகம் நடத்தும் விழாவில் இம்முறை 55க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இதில் கண்டுகளிக்கலாம். பிராஸ் பாஸா-பூகிஸ் வட்டாரம் குறித்து அதிகம் அறியப்படாத தகவல்களைப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இவை அமைந்திருக்கும்.