சிங்கப்பூர் கவிதை விழா அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் நடத்திவரும் கவிதை விழா, வரும் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மறுமலர்ச்சி எனும் கருப்பொருள் கொண்ட கவிதை விழாவில் பன்மொழி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பல சமயக் கவிதை வாசிப்பு, இந்திய மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலகப் பெண்கள் கவிதைகளின் வாசிப்பு, இளம் கவிஞர்களின் கலந்துரையாடல்கள் என பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் நிகழ்ச்சி கள் ஆகஸ்ட் 6ஆம், 7ஆம் தேதிகளில் இடம்பெறும்.
மேல்விவரங்களுக்கு: https://www.poetryfestival.sg/
நுழைவுச்சீட்டுகளுக்கு பதிவு செய்ய: https://peatix.com/