புத்தக நன்கொடை: பலனடையவுள்ள வெளிநாட்டு ஊழியர்கள்

1 mins read
ec0c9d5e-2fda-488a-b51d-5c1ef55611ff
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க தேசிய நூலக வாரியம் இந்த முயற்சியை மேற்கொள்கிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மீண்­டும் வந்­து­விட்­டது தேசிய நூலக வாரி­யம் நடத்­தும் சிறப்பு புத்­தக நன்­கொடை இயக்­கம். தேசிய வாசிப்பு இயக்­கத்­தின் ஓர் அங்­க­மாக 'ரீட் ஃபோர் புக்ஸ்' என்­ற­ழைக்­கப்­படும் 'புத்­த­கங்­க­ளுக்­காக வாசி­யுங்­கள்' எனும் இந்த முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

வாசிப்­புப் பழக்­கம் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவும் வசதி குறைந்­தோ­ரு­டன் வாசிப்­புப் பழக்­கத்­தி­னால் வரும் இன்­பத்­தைப் பகிர்ந்­துகொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இணை­யம்­வ­ழி­யா­கவோ நேரில் சென்றோ இம்­மு­யற்­சி­யில் பங்­கேற்க நிறு­வ­னங்­க­ளுக்­கும் அமைப்­பு­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கப்­ப­டு­கிறது.

இதன்­கீழ் அடுத்த மாதம் முதல் தேதி­ய­லி­ருந்து 31ஆம் தேதி­வரை 15 நிமி­டங்­க­ளுக்கு வாசிக்­கும் ஒவ்­வொரு 10 பேருக்­கும் ஒரு புத்­த­கம் வசதி குறைந்த சிறு­வர்­க­ளுக்­கான 'வொண்­ட­ரீட்' வாசிப்பு இயக்­கத்­திற்­கும் 'மைகி­ரண்ட் வொர்க்­கர் லைப்­ரரி' எனும் வெளி­நாட்டு ஊழி­யர் நூல­கத்­திற்­கும் நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும்.

இம்­மு­யற்­சி­யின் மூலம் இவ்­வாண்டு மொத்­தம் 1,200 புத்­த­கங்­களை நன்­கொ­டை­யாக வழங்­கு­வது இலக்கு.

'புத்­த­கங்­க­ளுக்­காக வாசி­யுங்­கள்' முயற்­சி­யில் எவ்­வாறு பங்­கேற்­பது உள்­ளிட்ட தக­வல்­களை https://go.gov.sg/readforbooks2022 இணைய முக­வ­ரி­யில் பெற்­றுக்­கொள்­ள­லாம். தனி­ந­பர்­களும் கலந்­து­கொள்­ள­லாம்.