மலேசியாவில் வாகன விபத்தில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது?

மலேசியாவில் வாகன விபத்தில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது?

3 mins read
6c7101c9-afd5-4333-a349-f7b60f76e7be
ஜூலை 7ஆம் தேதி கடற்பாலத்தில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்-மலே­சியா தரை­வழி எல்லை ஏப்­ரல் 1ஆம் தேதி மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தில் இருந்து, வாக­ன­மோட்­டி­கள் மலே­சி­யா­வுக்­குச் சென்று வரு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­பட்ட 'ஹோண்டா சிவிக் டைப் ஆர்' கார் ஒன்று, மலே­சி­யா­வின் பாகாங் மாநி­லம், ஜென்­டிங் ஹைலண்ட்­சில் உள்ள ஸ்கை­அ­வென்யூ கடைத்­தொ­கு­தி­யின் வாகன நிறுத்­து­மி­டத்­தில் காணா­மல்­போ­ன­தாக ஜூலை 16ஆம் தேதி புகார் அளிக்­கப்­பட்­டது.

மூன்று நாள்­கள் கழித்து, சிலாங்­கூர் மாநி­லத்­தில் உள்ள கொண்­டோ­மி­னிய வாகன நிறுத்­து­மி­டத்­தில் அது கண்­ட­றி­யப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால், அந்த காரின் சில பாகங்­களைக் காண­வில்லை என்­றும் அதில் வேறொரு பதிவு எண் பட்டை பொருத்­தப்­பட்டு இருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

மலே­சி­யா­வில் இது­போன்ற சிக்­கல்­களுக்கு ஆளா­கும்­போது, என்ன செய்ய வேண்­டும் என்­பது குறித்து சில கேள்வி­க­ளுக்கு இங்கு பதி­ல­ளிக்­கப்­படு­கிறது.

சிங்கப்பூருக்கு வெளியே என் வாகனத்தைப் பயன்படுத்த கூடுதல் காப்புறுதியைப் பெற வேண்டுமா?

பொது­வாக, தனி­யார் வாகன காப்­பு­று­திக் கொள்கை, மலே­சிய தீப­கற்­பத்­தி­லும் மலே­சியா-தாய்­லாந்து எல்லை­யில் இருந்து 80 கிலோ­மீட்­டர் தூரம் வரை­யி­லும் செல்­லு­ப­டி­யா­கும்.

மலே­சி­யா­வில் காரையோ மோட்­டார்­சைக்­கி­ளையோ பயன்­ப­டுத்த, மூன்­றாம் தரப்­புக்கு ஏற்­படும் அபா­யத்­துக்கு எதி­ராக செல்­லு­ப­டி­யா­கும் காப்­பு­று­தியை வைத்­தி­ருப்­பது சட்­ட­படி கட்­டா­ய­மா­கும்.

குறைந்­த­பட்ச காப்­பு­றுதி அள­வான இது, மற்ற தரப்­புக்கு ஏற்­படும் சேதத்­தையோ காயத்­தையோ சரி­செய்ய உத­வும்.

ஆனால், இந்­தக் காப்­பு­றுதி உங்­களுக்கோ உங்­கள் வாக­னத்­துக்கோ பொருந்­தாது.

மலேசியாவில் என் காரைக்

காணவில்லை - நான் என்ன செய்வது?

காவல்­து­றை­யி­டம் புகார் அளித்து, அதற்­கு­ரிய ஆவ­ணத்தை சிங்­கப்­பூ­ருக்குக் கொண்டு வர­வும். உங்­கள் காப்­பு­றுதி நிறு­வ­னத்­தி­டம் கோரிக்­கை­யைத் தாக்­கல் செய்­ய­வும். விரி­வான, மூன்றாம் தரப்பு காப்­பு­று­திக் கொள்கை­யைக் கொண்­டி­ருப்­போ­ருக்கு மட்டுமே இழப்­பீடு வழங்­கு­வது பொருந்­தும்.

என் கார் திருடப்பட்டுவிட்டதால், எப்போது எனக்கு இழப்பீடு வழங்கப்படும்?

மலே­சி­யா­வில் கார் திரு­டப்­பட்­டால், காவல்­துறை விசா­ரணை முடி­வ­டை­யும்­வரை காப்­பு­றுதி நிறு­வ­னம் காத்­தி­ருக்­கும். விசா­ரணை முடிந்த பின்­னரே இழப்­பீடு வழங்­கப்­ப­ட­லாம்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட என் கார், மலேசியாவில் விபத்துக்குள்ளானது. காவல்துறையிடம் நான் புகார் அளிக்க வேண்டுமா?

ஆமாம். நாட்­டின் 'சாலைப் போக்கு­வரத்­துச் சட்­டம் 1987'ன்கீழ், 24 மணி நேரத்­திற்­குள் அரு­கி­லுள்ள காவல் நிலை­யத்­தில் விபத்து குறித்து புகார் அளிப்­பது சட்­ட­படி கட்­டா­ய­மா­கும்.

உங்­க­ளது ஓட்­டு­நர் உரி­மை­யை­யும் காப்­பு­று­திச் சான்­றி­த­ழை­யும் எடுத்­துச் செல்­லுங்­கள்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள உங்­க­ளது காப்­பு­றுதி நிறு­வ­னத்­தி­டம் நீங்­கள் கோரிக்­கை­யைத் தாக்­கல் செய்­யும்­போது, காவல்­து­றை­யி­டம் நீங்­கள் புகார் அளித்­த­தற்­கான ஆவ­ணத்­தைச் சமர்ப்­பிக்க வேண்­டும்.

காப்­பு­றுதி நிறு­வ­னத்­தி­டம் அடுத்த நாளுக்­குள் விபத்து குறித்து தெரி­யப்­படுத்த வேண்­டும்.

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காருடன் என் கார் விபத்துக்கு உள்ளானால், அதற்குரிய இழப்பீடு எனக்குக் கிடைக்குமா?

இது மிகவும் கடினமான காரியமாகும். எல்லைக்கு இருபுறங்களிலும் உள்ள காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையே அதிகாரபூர்வமான தொடர்பு இல்லாததே இதற்குக் காரணம்.

ஒவ்வொரு தரப்பும் தம் சொந்த காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக கோரிக்கையைத் தாக்கல் செய்வதே ஆக விரைவான, எளிதான தெரிவாக இருக்கும் என்று ஜிஐஏ தலைமை நிர்வாகி ஹோ காய் வெங் வாகனமோட்டிகளுக்கு அறிவுறுத்துகிறார்.

மலேசியாவுக்கு வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது சிக்கலைவிட்டு விலகி இருக்க என்ன செய்ய வேண்டும்?

மலேசியாவுக்கு வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது உங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். காப்புறுதிச் சான்றிதழ், வாகனப் பதிவு அட்டை உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். உங்கள் காப்புறுதி நிறுவனத்தைத் தொடர்புகொள்ள அதன் தொடர்பு விவரங்களை உங்கள் கைப்பேசியில் பதிவு செய்துகொள்ளவும்.

பாதுகாவல் அதிகாரிகள் இருக்கும் வெளிச்சமான, எளிதில் கண்ணுக்குத் தெரிகிற இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைப்பது சிறந்தது. வாகனத்தில் உள்ள விலை மதிப்பிலான உடைமைகளைக் கண்ணுக்குத் தெரியாதவாறு வைத்து இருக்க வேண்டும்.

வாகனத்திற்குள் கண்காணிப்புக் கருவியைப் பொருத்தி, அது எல்லா நேரமும் செயல்படும்படி உறுதி செய்வது நல்லது. திருடர்களைத் தடுக்கக்கூடிய அது, விபத்து ஏற்பட்ட ஆதாரத்தை வழங்கும் பயனுள்ள கருவியாக இது திகழ்கிறது.