தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

42வது திருமுறை மாநாடு

2 mins read

சிங்­கப்­பூ­ரில் ஆண்­டு­தோ­றும் நடை­பெறும் திரு­முறை மாநாடு வரும் வெள்­ளிக்­கி­ழமை தொடங்கி ஞாயிற்­றுக்­கிழமை (ஜூலை 31) வரை செளத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் ஆலய திரு­மண மண்­ட­பத்­தில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 வரை நடை­பெற உள்­ளது.

தமிழ்­நாடு தேவ­கோட்­டை­யைச் சேர்ந்த திரு ந.ஸ்ரீநி­வா­சன், இந்நிகழ்வில் சிறப்­புப் பேச்­சா­ள­ரா­கக் கலந்­து­கொள்­கி­றார்.

முதல் நாள் திரு க.அம்­ப­ல­வா­ணர் சிறப்புச் சொற்­பொ­ழி­வாக 'திரு­மு­றை­யில் தொண்டு நெறி' என்ற தலைப்­பிலும் மற்ற இரு­ நாள்­க­ளி­லும் 'திரு­முறை­யில் ஞான­நெறி', 'திரு­மு­றை­யில் பக்தி நெறி' என்ற தலைப்­பு­களி­லும் உரை­யாற்ற உள்­ளார்.

டெப்போ ரோடு அருள்­மிகு ருத்ர காளி­யம்­மன் ஆல­யத்­தின் ஆத­ர­வு­டன் நடை­பெ­றும் இந்த மூன்று நாள் மாநாட்­டில் பொது அறுவை சிகிச்சை மருத்­து­வர் டாக்டர் இக்­கு­வ­னம் சுவா­மி­நாதன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­கி­றார்.

மாநாடு தொடர்­பாக முன்­னரே நடை­பெற்ற திரு­மு­றை­கள் ஓதும் போட்டி, வண்­ணம் தீட்­டும் போட்டி, மாறு­வே­டப் போட்டி என இன்­னும் பல போட்­டி­களில் கலந்­து­கொண்டு வெற்றி பெற்­ற­வர்­களுக்­கான பரிசுகள் சனிக்­கி­ழமை இர­விலும் ஞாயிற்றுக்­கி­ழமை காலை­யி­லும் இர­வி­லும் வழங்­கப்­படும்.

ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 8.30 மணிக்கு மார்­சி­லிங்­கில் உள்ள அருள்­மிகு சிவ­கி­ருஷ்ண ஆல­யத் திரு­மண மண்­ட­பத்­தில் நடை­பெ­றும் 63 நாயன்­மார் குரு­பூ­சை­யைத் தொடர்ந்து இடம்­பெ­றும் கேள்வி-பதில் நேரத்­தில் திரு ந.ஸ்ரீநி­வா­ச­னும் டாக்­டர் சுப திண்­ணப்­பனும் வருகை தரு­வோர் எழுப்­பும் சைவ சமய கேள்­வி­க­ளுக்கு விளக்­க­ம் அளிப்­பர்.

சிங்­கப்­பூர் இந்து ஆல­யங்­களில் பணி­யாற்­றும் எல்லா ஓது­வார்­களும் ஒவ்­வொரு மாலை நேர­மும் பக்­க­வாத்­தி­யக் கலை­ஞர்­க­ளின் துணை­யு­டன் திரு­மு­றை­க­ளைப் பண்­ணோடு ஓதிப் பர­வ­சப்­ப­டுத்­து­வர்.