திரிவேணி: இசைச் சங்கமம்

திரிவேணி: இசைச் சங்கமம்

1 mins read

சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழ­கம், 'எஸ்­பி­ள­னேட்-தியேட்­டர்ஸ் ஆன் த பே' உடன் இணைந்து, மூன்று இசை மேதை­கள் பங்­கு­கொள்­ளும் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

'திரி­வேணி' எனும் இந்­நி­கழ்ச்சி­யில் புகழ்­பெற்ற தபேலா இசைக்­க­லை­ஞர் உஸ்­தாத் ஸாகிர் உசேன், வய­லின் மேதை கலா ராம்­நாத், வீணை விற்­பன்­னர் ஜெயந்தி கும­ரேஷ் ஆகி­யோர் இணைந்து இசை விருந்து படைக்­க­வி­ருக்­கின்­ற­னர்.

அடுத்த மாதம் 14ஆம் தேதி இரவு ஏழரை மணிக்கு 'எஸ்­பி­ள­னேட் கச்­சேரி அரங்­கில்' இடம்­பெறும் இந்­நி­கழ்ச்­சிக்கு சிங்­கப்­பூ­ரில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கம் ஆத­ரவு வழங்­கு­கிறது.

இந்­தியா அதன் 75வது சுதந்­திர தினத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்­டா­டு­வதை முன்­னிட்­டும் இந்­தி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான பல்­லாண்டு கலா­சார நல்­லு­ற­வைப் பிர­தி­ப­லிக்­கும் வண்­ண­மா­க­வும் இந்­நி­கழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் கூறி­னர்.

திரி­வேணி என்ற சொல் மூன்று நதி­க­ளின் சங்­க­மத்­தைக் குறிக்­கிறது. அது­போல இந்த மூன்று புகழ்­பெற்ற இசைக் கலை­ஞர்­க­ளின் விரல்­வழி வழி­யும் இசை நதி­வெள்­ளம்போல் பெருகி, சங்­க­மித்து வருகை­யா­ளர்­களை மகிழ்­விக்­கும் என்று இவர்­கள் நம்­பிக்கை தெரி­வித்­த­னர்.

கலா ராம்­நாத் இந்­துஸ்­தானி சங்­கீ­தத்தை வய­லி­னி­லும் ஜெயந்தி கும­ரேஷ் கர்­நா­டக சங்­கீ­தத்தை வீணை­யி­லும் வாசிக்­கும் வேளை­யில் ஸாகிர் உசேன் இரு­வகை இசை­யை­யும் தபேலா­வில் வாசிப்­பார் என்று கூறப்­பட்­டது.

$100, $75, $50 நுழை­வுச்­சீட்­டு­களுக்கு https://www.sistic.com.sg/events/triveni0822 என்ற இணைய முக­வ­ரியை நாட­லாம்.