சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுப்பயணங்களில் பலர் ஆர்வம்

2 mins read
04cb988b-1a2e-4288-999b-c5ea57bcb2d5
-

நம் வாழ்க்­கையை, வாழ்க்­கை­முறையை கொவிட்-19 கொள்­ளை­நோய் அப்­ப­டியே புரட்­டிப் போட்­டு­விட்­டது. வெளி­நாட்­டுப் பய­ணங்­களில் இன்­பம் காண­லாம் என்­றிருந்த நாம், கிரு­மித்­தொற்­று சூழ­லால் சுகா­தா­ரத்­திற்­கும் பாது­காப்­புக்­கும் முன்­னு­ரிமை அளிக்­கத் தொடங்­கி­னோம்.

நாடு­கள் தங்­கள் எல்­லை­க­ளைத் திறந்­து­வ­ரும் இந்­நி­லை­யில், சுற்­றுச்­சூ­ழ­லுக்­குக் கூடு­தல் தீங்கு இழைக்­கா­மல் வெளி­நாட்­டுப் பய­ணங்­களை எவ்­வாறு பொறுப்­பு­ணர்­வு­டன் மேற்­கொள்­ள­லாம் என்­பது குறித்­து மக்­கள் திட்­ட­மி­டு­வதை அண்­மைய மாதங்­களில் காண முடி­கிறது. வெளி­நாட்­டுப் பய­ணங்­களுக்­குச் சுற்­றுச்­சூ­ழல் சார்ந்த சுற்­றுப்­ப­யண இடங்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் இவர்­கள் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர்.

சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்­கும் இயற்­கைப் பகு­தி­க­ளுக்­குப் பொறுப்­பு­ணர்­வு­டன் பய­ணம் மேற்­கொள்­ளு­தல், அங்­குள்ள உள்­ளூர்­வா­சி­களின் நல­னைப் பேணிக்­காத்­தல், கற்­ற­ல் நிகழ்­தல் போன்ற அம்­சங்­களைச் சுற்­றுச்­சூ­ழல் சார்ந்த சுற்­றுப்­ப­ய­ணங்­கள் கொண்­டி­ருக்­க­லாம்.

இயற்­கைக் காட்­சி­யில் லயித்­துப் போகும் அதே­நே­ரம், ஒரு­வர் அந்த இயற்கையைப் பாதுகாப்பதற்கும் பங்­க­ளிக்­க­லாம்.

இத்­த­கைய சுற்­றுப்­ப­ய­ணங்­களால் உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களும் அதி­க­ரிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. உள்­ளூர்­வா­சி­களும் தங்­க­ளின் சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்க ஊக்­கம் பெறு­வர் என்ற எதிர்­பார்ப்­பில் அவர்­க­ளுக்கு நிதி நிவா­ர­ணம் வழங்­கப்­ப­டு­கிறது.

மலை­யே­றும்­போ­தும் குகை­களுக்­குள் சென்று சுற்­றி­வ­ரும்­போதும் வனப் பகு­தி­க­ளைப் பாது­காப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை உணர முடி­யும். பவ­ளப் பாறை­களைக் காண முக்­கு­ளிக்­கும்­போதும் சுறாக்­க­ளு­டன் நீந்­தும்­போதும் தண்­ணீர் மாசு­பாடு குறித்த விழிப்­பு­ணர்­வைச் சுற்­றுப்­ப­ய­ணி­கள் பெறு­வர். அந்­தச் சுற்­றுச்­சூ­ழ­லில் பய­ணம் செய்­த­வாறு அங்­குள்ள உயி­ரி­னங்­க­ளுக்­கும் சுற்­றுச்­சூ­ழல் அமைப்­பு­முறைக்கும் பாதிப்பு ஏதும் ஏற்­ப­டுத்­தா­மல் இருப்­பர்.

அதி­கம் கண்­டி­ராத ஒரு சுற்­று­லாத் தளத்தை அடை­யும் ஒரு­வர், அங்­குள்ள இயற்­கையை ரசித்த பின்பு, அவ்­வி­டத்தை மேம்­பட்ட நிலை­யில் விட்­டுச் செல்­ல வேண்டும் என்­பதே இது­போன்ற சுற்­றுச்­சூ­ழல் சார்ந்த சுற்­றுப்­ப­ய­ணங்­க­ளின் நோக்­க­மா­கும்.

இதற்­கி­டையே, சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்க வேண்­டி­ய­தன் அவ­சியத்தை அறிந்­த­வாறு அதி­க­மான இளை­யர்­களும் செயல்­ப­டத் தொடங்கி­யுள்­ள­னர்.

சுற்­றுப்­ப­ய­ணத் துறை­யில் உள்ள நிறு­வ­னங்­கள் இதை அறிந்து தங்­களின் செயல்­பா­டு­களை மாற்­றும் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

பரு­வ­நிலை மாற்­றத்­தால் இயற்­கைப் பகு­தி­கள் மெல்ல மெல்ல அழிந்­து­வ­ரு­வ­தைக் கண்­கூ­டா­கப் பார்க்க முடி­வ­தால் அது நேரா­மல் பார்த்­துக்­கொள்ள பல­ரும் தங்­களால் இயன்­ற­தைச் செய்­கின்­றனர். பசுமை வாழ்க்­கை­மு­றையை ஒவ்­வொ­ரு­வ­ரும் பின்­பற்­று­வ­து­டன் அடுத்த தலை­மு­றை­யி­ன­ரி­டை­யே­யும் அதை வித்­திட வேண்­டும் என்­கின்­றனர் சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர்­கள்.

அத்துடன் மனித உரி­மைக்கு ஆத­ரவு தரவும் அனைத்­து­லக ரீதி­யில் அமை­தியை நிலை­நாட்­ட­வும் முடி­யும்.

எனவே, சுற்­றுப்­ப­ய­ணி­யாக ஓர் இடத்­திற்­குச் சென்­றா­லும் அங்கு நம்­மால் எந்த ஒரு பாதிப்­பும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு நேரக்­கூ­டாது என்­பதை மன­தில் நிறுத்­த­வேண்­டும்.

நமது அடுத்த சுற்­றுப்­ப­ய­ணத்­தைத் திட்­ட­மி­டும்­போது அதை எவ்­வாறு பொறுப்­பு­ணர்­வு­டன், சுற்­றுச்­சூ­ழ­லைப் பாதுகாக்கும் கடப்­பாட்டுடன் மேற்­கொள்­ள­லாம் என்­பதைக் கருத்­தில்கொண்டு மேற் கொள்ளலாம். செய்தி: இணையம், படம்: அன்ஸ்பிலேஷ்