ஆரோக்கியம் பேண, செப்புப் பாத்திரக் குடிநீர்

ஆரோக்கியம் பேண, செப்புப் பாத்திரக் குடிநீர்

3 mins read
2a53b221-d7ff-433f-98b9-16d79508aa3e
செப்புப் பாத்திரங்களில் குறைந்தது நான்கு மணி நேரம் வரை சேமிக்கப்படும் தண்ணீரில் நுண்கிருமிகள் முற்றிலுமாக அழிந்துபோகின்றன. 'இ-கோலி', 'சால்மோனெல்லா' போன்ற நுண்கிருமிகளால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க இந்த நீர் உதவுகிறது. ரத்த விருத்திக்கும் சருமப் பொலிவிற்கும் செப்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட குடிநீர் கைகொடுக்கிறது. செப்புப் பாத்திரங்களை முறையாகத் துலக்கிய பிறகே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, குழாய்கள் பொருத்தப்பட்ட செப்புப் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் தேவை. -
multi-img1 of 2

செம்பு அல்­லது செப்பு எனப்­படும் உலோ­கம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தும் அதன் பயன்­பா­டும் மனி­த­கு­லத்­தின் நாக­ரிக வர­லாற்­றில் ஒரு மைல்­கல் என்றே சொல்­ல­லாம்.

நம்­மைச் சுற்­றி­லும் இன்று காணப்­படும் பல்­வேறு பொருள்­களைச் சிறி­த­ள­வா­வது செம்பு சேர்த்­தால்­தான் செய்ய முடி­யும். ஆப­ர­ணத் தங்­கம், தொழில்­நுட்­பக் கரு­வி­கள், வாக­னங்­கள், மின்­சா­தன இணைப்­பு­கள், கத­வுக் கைப்­பி­டி­கள், அலங்­கா­ரப் பொருள்­கள் எனப் பல­வும் இதில் அடங்­கும்.

சமை­யல் பாத்­தி­ரங்­களும் பழங்­கா­லத்­தில் இருந்தே செம்­பில் செய்­யப்­ப­டு­வ­தை­யும் தொழில்­முறை சமை­யல் வல்­லு­நர்­கள் பல­ரும் செப்­புப் பாத்­தி­ரங்­களில் சமைப்­பதை விரும்­பு­வ­தை­யும் நாம் பார்க்­கி­றோம்.

இதே­போல பண்­டைக் காலத்­தில் நடை­மு­றை­யில் இருந்­தி­ருந்­தா­லும் பின்­னர் சில காலம் வெகு­வா­கக் குறைந்து, இப்­போது மீண்­டும் அதி­கம் பர­வு­கிறது, குடி­நீரை செப்­புப் பாத்­தி­ரத்­தில் வைத்­துப் பயன்­ப­டுத்­தும் பழக்­கம்.

இயல்­பா­கவே நுண்­கி­ரு­மி­களை அழிக்­கும் திறன் கொண்­டது செம்பு. இதில் சேமித்த தண்­ணீ­ரைக் குடிப்­ப­தால் உட­லின் ஆரோக்­கி­யம் பல வழி­களில் மேம்­ப­டு­கிறது என்­கி­றார்­கள் ஆய்­வா­ளர்­கள்.

காயத்தை ஆற்­று­தல், தோல் சிகிச்சை, வலி நிவா­ர­ணம், வீக்­கத்­தைப் போக்­கு­தல், ரத்த சோகையை குணப்­ப­டுத்­து­தல் என்று பல நன்­மை­கள் கிடைப்­ப­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

குறிப்­பாக செப்­புப் பாத்­தி­ரத்­தில் உள்ள நீரைப் பரு­கி­னால் உட­லின் நோய்­எ­திர்ப்­புச் சக்தி அதி­க­ரிக்­கும் என்­றும் செரி­மா­னம் சீரா­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

நோய்­எ­திர்ப்­புச் சக்தி:

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்­குப் பிறகு உட­லின் நோய் எதிர்ப்­புச் சக்­தி­யில் ஈடு­பாடு காட்­டா­த­வர்­களே இல்லை எனு­ம­ளவு உல­கில் இது­கு­றித்த கவ­னம் மக்­க­ளி­டையே அதி­க­ரித்­துள்­ளது. இது, அது என்­றில்­லா­மல் எந்த நோயி­லி­ருந்­தும் காத்­துக்­கொள்ள ஒரு­வ­ரது நோய் எதிர்ப்­புத் திறன் அதி­க­மாக இருக்க வேண்­டும்.

ஒரு­வ­ரது உட­லில் செம்­புச் சத்து குறைந்­தால் ரத்­தத்­தில் வெள்ளை அணுக்­கள் குறை­யும் அபா­யம் அதி­கம் என்று ஆய்­வு­கள் கூறு­கின்­றன. அடிக்­கடி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­படு­வோ­ரும் நோய் எதிர்ப்பு ஆற்­றல் குன்­றி­ய­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டோ­ரும் செம்­புச் சத்தை அதி­க­ரிக்­கும் வழி­க­ளைப் பின்­பற்­றி­னால் நல்ல பலன் கிடைக்­கும் என்று கூறப்­படுகிறது. நுண்­கி­ரு­மி­களை அழிப்­ப­தால் குடி­நீர் மூலம் பர­வும் நோய்த்­தொற்­று­களில் இருந்து செப்­புப் பாத்­திர நீர் நம்­மைப் பாது­காக்­கின்றது.

வலு­வான எலும்­பு­கள்:

எலும்­பு­கள் வலு­வாக இருக்க கால்­சி­யம், வைட்­ட­மின்-D போன்­றவை தேவை என்­பது நமக்கு நன்­றா­கத் தெரி­யும். ஆனால் செம்­புச் சத்து குறை­வ­தா­லும் எலும்­பு­கள் வலு­வி­ழக்­கக்­கூ­டும் என்­கின்­ற­னர் மருத்­து­வர்­கள்.

செம்­புச் சத்து எலும்­பு­க­ளின் அடர்த்­தியை அதி­க­ரிக்­க­வும் 'ஆஸ்­டி­யோ­பொ­ரோ­சிஸ்' எனும் எலும்­புப் புரை நோயைக் குறைக்­க­வும் உத­வும் என்­கின்­ற­னர் அமெ­ரிக்க ஆய்­வா­ளர்­கள். செம்­புப் பாத்­தி­ரத்­தில் உள்ள நீரை அருந்­து­வது இதற்கு நல்ல பலன் தரும் என்று நம்­பப்­படு­கிறது.

இதய நலம்:

செம்பு, நம் உட­லில் கொழுப்பு, ட்ரை­கி­ளி­ச­ரைடு ஆகி­ய­வற்­றின் அள­வைக் குறைத்து, இத­யத்­திற்­கான ரத்த ஓட்­டத்தை மேம்­ப­டுத்த உத­வு­வ­தால் இத­யம் தொடர்­பான சிக்­கல்­க­ளைக் குறைக்­கிறது. ரத்­தத்­தில் செம்­பின் அளவு குறைந்­தால் உயர் ரத்த அழுத்­தம் உள்­ளிட்ட பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

செப்­புப் பாத்­தி­ரத்­தில் உள்ள நீரைக் குடிக்­கும்­போது ரத்­தம் இயல்­பா­கவே சுத்­தி­க­ரிக்­கப்­படும்.

ஆயுர்­வே­தம்:

செப்­புப் பாத்­தி­ரத்­தில் உள்ள நீரைத் தொடர்ந்து குடித்து வந்­தால், உட­லின் வாதம், பித்­தம், கபம் மூன்­றும் சம­நிலை காணும் என்­றும் இது ஆரோக்­கி­யத்­திற்கு உத­வும் என்­றும் ஆயுர்­வேத மருத்­து­வ­முறை கூறு­கிறது. இந்­தக் குடி­நீர் உட­லின் அமி­லத்­தன்­மை­யை­யும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக இது சொல்­கிறது.

பரு­கும் முறை:

செப்­புப் பாத்­தி­ரத்­தில் தண்­ணீரை எப்­ப­டிச் சேமித்­தால் முழு­மை­யான பயன்­க­ளைப் பெற­லாம்?

கூடு­மா­ன­வரை வாய் அகன்ற பாத்­தி­ரத்தை இதற்­குப் பயன்­ப­டுத்த வேண்­டும். குறு­கிய பாத்­தி­ரங்­க­ளைச் சுத்­தம் செய்­வது சிர­மம்.

முறை­யா­கச் சுத்­தம் செய்­யா­விட்­டால் அங்கே கிரு­மி­கள் தேங்­க­வும் ரசா­யன மாற்­றத்­தால் பச்­சைக் களிம்பு போன்ற ஏடு படி­ய­வும் வாய்ப்­புண்டு. சூடான நீரை ஊற்றக்கூடாது.

அன்­றா­டம் இர­வில் செப்­புப் பாத்­தி­ரத்­தில் நீரை நிரப்பி, காலை வரை அப்­ப­டியே வைத்­தி­ருக்க வேண்­டும். குறைந்த பட்­சம், நான்கு மணி நேர­மா­வது ஆக வேண்­டும்.

இந்த முறை, தண்­ணீ­ரில் உள்ள நுண்­கி­ரு­மி­களை அழித்து நீரைச் சுத்­தி­க­ரிக்­கிறது. 'ஆன்­டி­ஆக்­ஸி­டன்ட்' நிறைந்த இந்த நீர், உட­லில் புதிய, ஆரோக்­கி­ய­மான உயி­ர­ணுக்­களை உரு­வாக்­கத் துணை­செய்­கிறது.

சுத்­தப்­ப­டுத்­தும் முறை:

அன்­றா­டம் செப்­புப் பாத்­தி­ரத்­தைத் துலக்­கு­வது நல்­லது. வழக்­க­மாக நாம் பாத்­தி­ரம் துலக்­கப் பயன்­ப­டுத்­தும் ரசா­ய­னத் திர­வத்­தைத் தவிர்த்­து­வி­ட­வும்.

புளி அல்­லது எலு­மிச்­சைச் சாற்­று­டன் உப்பு சேர்த்து செப்­புப் பாத்­தி­ரங்களைத் துலக்­க­லாம். வெறும் உப்பு மட்­டும் பயன்­ப­டுத்­தி­த் துலக்க வேண்­டாம்.

தகவல், படங்கள்: இணையம்