'உணவைத் தவிர்த்து புரதச் சத்து பானம் பருகுவது உடலுக்கு நல்லதல்ல'

'உணவைத் தவிர்த்து புரதச் சத்து பானம் பருகுவது உடலுக்கு நல்லதல்ல'

1 mins read
9ab84468-ba6b-4ce2-97bd-a4fb2f9dfd3d
-

மனித உட­லுக்­குப் பொது­வாக அன்­றா­டம் 50 கிரா­முக்­குக் குறை­யாத அள­வில் புர­தச் சத்து தேவைப்­ப­டு­வ­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதை நமது வழக்­க­மான உண­வில் இருந்தே பெற­மு­டி­யும். ஆனா­லும் இன்­றைய அவ­சர உல­கில் இளை­யர்­கள் பல­ரும் இதைத் தவிர்த்து புர­தச் சத்து பானத்­தைப் பரு­கு­கின்­ற­னர்.

பால், தயிர், பருப்பு, பயறு, காளான், மீன், முட்டை, இறைச்சி போன்­ற­வற்றை உட்­கொண்­டால் போதும். இப்­படி இயற்­கை­யாக உற்­பத்­தி­யா­கும் உணவை உண்­ணும்­போது, புர­தச்­சத்­து­டன் உட­லுக்கு தேவை­யான நார்ச்­சத்து, வைட்­ட­மின், தாதுக்­கள் போன்ற மற்ற சத்து­களும் கிடைத்­து­வி­டும். இது உடல் ஆரோக்­கி­யத்­துக்கு இன்­னும் வலு சேர்க்­கும். ஆனால், 'புரோட்­டின் ஷேக்' அருந்­தும்­போது, அதி­லுள்ள புர­தம் மட்­டுமே உட­லில் சேரும். மற்ற சத்­து­கள் சேர வழி­யில்லை. உடல் எடை­யைக் குறைக்க விரும்­பும் சில­ரும் உண­வைத் தவிர்த்­து­விட்டு இந்த பானங்­க­ளைப் பரு­கு­கின்­ற­னர்.

சத்துபானம் தானே என்று அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்து, இதய நோய் ஏற்படும்; கல்லீரல் நோய்க்கு அடிபோடும் என்று எச்சரிக்கின்றனர்.

படம்: இணையம்