பாதி இரவில் பசியை ருசியோடு வெல்லும் வழிகள்

பாதி இரவில் பசியை ருசியோடு வெல்லும் வழிகள்

2 mins read
93500516-fe0b-45e4-9327-712394aa725a
-

நம்­மில் பல­ருக்கு இரவு உணவை நிறை­வாக உண்ட பிற­கும்­கூட சில நாள்­களில் நள்­ளி­ர­வுக்­கு­மேல் பசிப்­ப­து­போ­லத் தோன்­ற­லாம். சில­ருக்கு இது அடிக்­கடி நிக­ழ­லாம்.

குறிப்­பாக இரவு விழித்­தி­ருந்து தொலைக்­காட்சி பார்க்­கை­யில் உணவு குறித்த விளம்­ப­ரங்­க­ளைப் பார்த்­தால் அனிச்­சை­யா­கச் சில­ருக்­குப் பசிக்­கக்­கூ­டும்.

சற்­றும் யோசிக்­கா­மல் சாக்­லெட், பிஸ்­கட், உரு­ளை­கி­ழங்கு வறு­வல், கேக் எனக் கலோ­ரி­கள் பற்­றி­யெல்­லாம் கவ­லைப்­ ப­டா­மல் ஒரு கட்டு கட்­டி­விடுவர். இத்­த­கைய செயல் செரி­மா­னத் திற­னைப் பாதிக்­கும் என்று வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர். கழி­வு­களை அகற்­று­வ­தில் உடல் மும்­மு­ர­மாக இருக்­கை­யில் மேலும் செரிப்­ப­தற்­கான உணவை உள்ளே தள்­ளி­னால், பல்­வேறு கோளா­று­கள் ஏற்­படுமென்று எச்­ச­ரிக்கின்றனர்.

அதற்கு அப்­பா­லும், இது நல்ல வாழ்க்­கை­மு­றை­யைப் பிரதி­ப­லிக்­க­வில்லை என்ற கருத்­தும் பல­ருக்கு உண்டு.

ஆனால், எனக்­குப் பசிக்­கி­றதே! என்ன செய்­வது என்று கவ­லைப்­ப­டு­கி­றீர்­களா?

பொட்­ட­ல­மி­டப்­பட்ட எந்த உண­வை­யும் தொடா­தீர்­கள். அவற்­றுக்­குப் பதி­லாக, இனிய சுவை­யு­டைய பழங்­களை உண்­ண­லாம். கேரட், வெள்­ளரி போன்ற சத்­துள்ள காய்­க­றி­களை நறுக்கி உண்­ண­லாம்.

இவை எல்­லாம் எளி­தில் செரிக்­கக்­கூ­டி­யவை என்­ப­தால் உட­லுக்கு அதி­கம் தீங்கு விளை­விக்­க­மாட்டா.

பசி என்று தோன்­றிய உடனே உண்­ணா­மல் காய், பழங்­களை நறுக்­கு­வ­தில் சிறிது நேரம் செல­வி­டு­வ­தால் உங்­கள் பசி சற்­றுத் தணி­ய­வும் வாய்ப்பு உண்டு.

சில நேரங்­களில் இரண்டு குவளை தண்­ணீரை அருந்­தி­னால்­கூட இப்­ப­டிப்­பட்ட பசி போன்ற உணர்வு மாறும். உட­லுக்­கும் செரி­மா­னப் பிரச்­சினை இல்லை என்­கின்­ற­னர் அனு­ப­வ­சா­லி­கள். உறங்­கச் செல்­லும் முன்­னர் மஞ்­சள்­தூள் சேர்த்­துக் காய்ச்­சிய பாலை வெது­வெ­துப்­பாக அருந்­தி­னால் இர­வில் பசி­யால் விழிக்க நேரி­டாது என்­றும் சிலர் சொல்­கின்­ற­னர்.

படம்: இணையம்