சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள் பங்குபெறும் மாதாந்தரச் சந்திப்பை ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் நடத்திவருகிறது கவிமாலை அமைப்பு.
கவிமாலையின் 266வது சந்திப்பு 30.07.2022 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு தேசிய நூலகத்தின் 'பாசிபிளிட்டி' அறையில் நடைபெறவிருக்கிறது. இம்மாதச் சந்திப்பில் தமிழ்செம்மல் அம்பை ஆ.பாலசரஸ்வதியின் சிறப்புரையுடன் 'புறப்பாடல்களில் இசைக்கருவிகள்' என்ற தலைப்பில் சித்ரா தணிகைவேலனின் சிற்றுரையும், 'என்னைக் கவர்ந்த மரபுப் பாடல்கள்' என்ற தலைப்பில் இராம். நாச்சியப்பனின் பகிர்வும் இடம்பெறவிருக்கின்றன. 'விடியாத இரவென்று எதுவுமில்லை' எனும் தலைப்பிலான இம்மாதப் போட்டிக் கவிதைகளின் விமர்சனமும் இடம்பெறும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

