சிங்கப்பூரில் மலபார் முஸ்லிம்களின் வரலாற்றைப் பறைசாற்றும் முதல் புத்தகம் வெளியீடு கண்டது

2 mins read
97d0b177-7135-4cd6-af4e-418b1e883d60
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் யாக்கோப் இப்ராஹிம் (இடது), கலாசார, சமூக, இளையர்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா (நடுவில்) ஆகியோருடன் நூலாசிரியர் முகமது நசீம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

யுகேஷ் கண்­ணன்

சிங்­கப்­பூ­ரில் வாழும் மல­பார் முஸ்­லிம் சமூ­கத்­தின் அடை­யா­ள­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது, ஜாலான் சுல்­தான்-விக்­டோ­ரியா ஸ்தி­ரீட் சாலைச் சந்­திப்­பில் வீற்­றி­ருக்­கும் மல­பார் பள்­ளி­வா­சல்.

இதன் வர­லாற்­றை­யும் மலை­யாள சமூ­கத்­தின் அங்­க­மான மல­பார் முஸ்­லிம்­க­ளின் வர­லாற்­றை­யும் விவ­ரிக்­கும் முதல் நூல் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யீடு கண்­டது.

கல்வி அமைச்­சின் மூத்த கல்வி அதி­கா­ரி­யான முக­மது நசீம் 'சிங்­கப்­பூ­ரின் நீலப் பள்­ளி­வா­சலும் கேர­ளா­வி­லி­ருந்து குடி­பெ­யர்ந்த முஸ்­லிம் சமூ­கம் குறித்த பார்வையும்' எனும் நூலை எழுதியுள்ளார்.

ஏறக்­கு­றைய 17ஆண்­டுத் தேட­லின் விளை­வாக, வரலாற்றுத் தொகுப்பாக உரு­வா­கி­யுள்­ளது 204 பக்­கங்­கள் கொண்ட இந்­த நூல்.

மல­பார் முஸ்­லிம் சமூ­கத்­தைச் சேர்ந்த திரு நசீம், 2005ஆம் ஆண்­டில் தாம் எதேச்­சை­யா­கக் காண நேர்ந்த செய்­தித்­தாள் புகைப்­பட விளக்­கக் குறிப்­பி­னால் உதித்த ஐயமே இந்த நூல் உரு­வா­கக் கார­ண­மாக இருந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

கடந்த 1963ஆம் ஆண்­டில் கட்டி முடிக்­கப்­பட்ட மல­பார் பள்­ளி­வா­சல் சிங்­கப்­பூ­ரின் முதல் அதி­ப­ரான யூசோஃப் இ‌‌‌ஷாக்­கால் திறந்­து­வைக்­கப்­பட்­டது. தற்­போது இந்­தப் பள்­ளி­வா­ச­லின் விரி­வாக்­கப் பணி­கள் நடந்­து­வ­ரு­கின்­றன.

மல­பார் பள்­ளி­வா­ச­லின் அடிக்­கல் நாட்­டும் விழா கடந்த 1956ஆம் ஆண்டு நடை­பெற்­ற­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டத்­தின் குறிப்­பில் மல­பார் முஸ்­லிம் ஜமாத்­தின் தலை­வ­ராக எழு­தப்­பட்­டி­ருந்த எச்.ஏ. ஜீவா­பாய் என்ற பெயர் மலை­யா­ளி­யின் பெய­ரைப்­போல இல்லை என்று இவ­ருக்­குத் தோன்­றி­யது.

ஐயத்­தைப் போக்­கும் வேட்­கை­யில் தேசிய நூல­கத்­திற்­குச் சென்று வர­லாற்­றுக் குறிப்­பு­களை எடுத்­துப் பார்த்­தார். அந்த ஆண்­டில் ஜமாத்­தின் தலை­வ­ராக இருந்­த­வர் சி.எச். அபு என்று தெரி­ய­வந்­தது. ஒரு கட்­டத்­தில் மல­பார் முஸ்­லிம்­க­ளின் பூர்­வீ­க­மான இந்­தி­யா­வின் கேர­ளா­விற்கே சென்று முன்­னோ­டித் தலை­மு­றை­யி­ன­ரி­டம் பேசித் தக­வல் சேக­ரித்­தார்.

பல்வேறு காரணங்களால் இந்த நூலை எழுதும் பணியை வெகு­நா­ளா­கத் தள்­ளிப் போட்­டு­வந்த­தாகவும், கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் சூழ்­நி­லை­யைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு நூலை எழுதி முடித்­த­தா­கவும் நூலாசிரியர் நசீம் கூறி­னார்.

தோ பாயோ­வில் அமைந்­துள்ள "ஒன் பீப்­பல்­எஸ்ஜி" கட்­ட­டத்­தில் கலா­சார, சமூக, இளை­யர்­துறை, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சு­க­ளின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா இந்த நூலை வெளி­யிட்­டார்.

புகைப்படத்துக்குத் தவறான குறிப்பை 1956ஆம் ஆண்­டில் எழு­திய ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ள­ருக்கு நன்றி என்று தமது உரை­யில் தெரி­வித்­தார் நூலா­சி­ரி­யர். மிகச் சிறிய சமூ­க­மான மல­பார் முஸ்­லிம் சமூ­கம் சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சிக்­குப் பெரும் பங்­காற்­றி­யுள்­ள­தால், அவர்­க­ளின் கதை­யும் மக்­க­ளுக்­குத் தெரி­வது முக்­கி­ய­மென இவர் கரு­து­கி­றார்.

இதன்வழி, மற்ற சிறு சமூ­கங்­களும் முன்­வந்து அவ­ர­வர் கதை­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள முனை­வ­ரெ­னத் திரு நசீம் நம்­பிக்கை கொண்­டுள்­ளார்.

இப்­புத்­த­கத்தை தேசிய மர­பு­டை­மைக் கழ­க­மும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மி­யச் சமய மன்­ற­மும் இணைந்து வெளி­யிட்­டுள்­ளன.

கினோ­கு­னியா போன்ற தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட புத்­த­கக் கடை­களில் $30க்கு இதை வாங்கலாம். விற்பனைவழி ஈட்­டப்­படும் தொகை மல­பார் பள்­ளி­வா­ச­லின் மறு­சீ­ர­மைப்பு பணி­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­ம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.