பூங்காவில் நேரம் செலவிட்டால் ஆரோக்கியம் கூடும்

பூங்காவில் நேரம் செலவிட்டால் ஆரோக்கியம் கூடும்

2 mins read
ac6236c7-3aaf-4573-a538-f10dbb0c0418
(இடது படம்:) இயற்கைச் சூழலில் அமைந்திருக்கு வட்டப் புதிர்ப் பாதையில் நடப்பது மன உளைச்சலைக் குறைக்க உதவுகிறது. (வலது மேல் படம்:) சிறுவர் விளையாட்டுத் திடல் பூங்காவிற்கு வருகையாளர்களை ஈர்க்கும் கூடுதல் அம்சம். பூங்காக்களில் காணப்படும் இத்தகைய கருவிகள் முதியோருக்கும் பக்கவாதத்தில் இருந்து மீண்டுவருவோருக்கும் கண்-கை ஒருங்கிணைப்புப் பயிற்சிக்கு உதவுகின்றன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3
Google News Preferred Icon

பூங்­காக்­க­ளுக்கு அடிக்­கடி சென்று அங்கு நீண்ட நேரம் செல­வி­டு­வோ­ரின் உடல்­ந­லம் மேம்­படும் என்று ஆய்­வு­கள் கூறு­கின்­றன. பூங்­கா­வில் கூடு­தல் அம்­சங்­கள் இருந்­தால் வரு­கை­யா­ளர்­கள் அங்கு அதிக நேரம் செல­வி­டு­வர் என்­றும் ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

இத்­த­கைய ஆய்வு முடி­வு­க­ளைக் கருத்­தில்­கொண்டே நாடு முழு­வதும் உள்ள 400 பூங்­காக்­க­ளை­யும் வடி­வ­மைத்­துப் பரா­ம­ரிப்­ப­தாக தேசி­யப் பூங்­காக் கழ­கம் சொல்­லிற்று.

குளம், பசுமை வனப்­புப் பகு­தி­கள் போன்ற அழ­கி­யல் அம்­சங்­கள், வரு­கை­யா­ளர் செல­வி­டும் நேரத்தை அதி­க­ரிக்க உத­வு­கின்­றன. பூங்காக்­களில் வெறு­மனே உட்­கார்ந்து இயற்கை அழகை ரசிப்­ப­வர்­க­ளுக்­குக்­கூட உடல்­ந­ல­மும் மன­ந­ல­மும் மேம்­ப­டு­வ­தாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

தேசிய வளர்ச்சி அமைச்­சும், சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­க­மும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தொடங்­கிய தொடர் ஆய்­வு­களின் முடி­வு­கள் அனைத்­து­லக சஞ்­சி­கை­க­ளி­லும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு, எளி­மை­யான பொழு­து­போக்கு வச­தி­க­ளு­டன் விரை­வில் வள­ரக்­கூ­டிய செடி வகை­க­ளைக் கழ­கம் பரா­மரித்து வந்­தது. ஆனால் தற்­போது அறி­வி­யல் அடிப்­ப­டை­யில் உடல்­நலம், மன­ந­லம் ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்­தும் வித­மாக பூங்­காக்­களை அது அமைத்­துள்­ளது.

ஓர் ஆய்­வில் கலந்­து­கொண்ட 3,435 பேர், சரா­ச­ரி­யாக மாதத்­தில் பத்து மணி நேரம் பூங்­காக்­களில் செல­வி­டு­வ­தா­கக் கூறி­னர்.

பிற நாடு­க­ளின் பூங்­காக்­க­ளை­விட சிங்­கப்­பூர் பூங்­காக்­கள் அள­வில் சிறி­தாக இருந்­தா­லும் இவை தர­மா­கப் பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தாக ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.

மற்­றோர் ஆய்­வில் பங்­கேற்­பாளர்­களில் பாதிப் பேர் ஆறு மாதம் பூங்­காக்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னர். ஆய்­வின் முடி­வில் பூங்­கா­விற்­குச் சென்ற குழு­வி­னர் மாதத்­தில் 333 நிமி­டங்­கள் துடிப்­பு­டன் செல­விட்­ட­னர். இதற்­கு­முன் அவர்­கள் மாதம் 130 நிமி­டங்­கள் மட்­டுமே துடிப்­பு­டன் செயல்­பட்­ட­னர்.

அடிக்­கடி பூங்­காக்­க­ளுக்­குச் செல்­வ­தும் அங்கு அதி­க­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தும் நன்மை பயக்­கும் என்­கின்­ற­னர் ஆய்­வா­ளர்­கள்.

தேசி­யப் பூங்­காக் கழ­கத்­தின் பாசிர் ரிஸ் பூங்கா போன்ற சில பூங்­காக்­கள் குணப்­ப­டுத்­தும் நோக்­கில் அமைக்­கப்­பட்­டவை. ஐம்­பு­லன்­க­ளின் செயல்­தி­றனை மேம்­ப­டுத்த உத­வும் இந்­தப் பூங்­கா­விற்கு வரும் மூத்­தோர் மூலி­கைச் செடி­களை வளர்க்­கும்­படி ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இந்­தப் பூங்­கா­வில் 200க்கும் மேலான தாவர வகை­கள் பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தா­கக் கழ­கம் தெரி­வித்­தது. ஆண்­டுக்கு ஏறக்­கு­றைய நான்கு மில்­லி­யன் வரு­கை­யா­ளர்­கள் வந்­து­செல்­லும் இந்­தப் பூங்­கா­வில் பற­வை­க­ளை­யும் வண்­ணத்­துப் பூச்­சி­க­ளை­யும் ஈர்க்­கும் ஒரு பகுதி உண்டு.

ஆய்­வில் கலந்­து­கொண்ட மூன்­றில் இரு­பங்­கி­னர் மாதத்­தில் சரா­ச­ரி­யாக எட்டு மணி நேரம் பூங்­கா­வில் செல­வி­டு­வ­தா­கக் கூறி­னர்.