லிட்டில் இந்தியாவில் தொண்டூழியர்களின் துப்புரவுப் பணி

2 mins read
254f0db4-97c6-4ddf-8f35-ef36df70fadd
டாக்டர் அப்துல் கலாமின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஜூலை 31ஆம் தேதி லிட்டில் இந்தியா பகுதியில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. செய்தி, படம்: அப்துல் கலாம் இலட்சியக் கழகம் -

டாக்­டர் ஏபிஜே அப்­துல் கலா­மின் 7வது நினைவு தினத்தை முன்­னிட்டு, ஜூலை 31ஆம் தேதி லிட்­டில் இந்தியா பகு­தி­யில் துப்­பு­ர­வுப் பணி மேற்­கொள்­ளப்­பட்­டது.

அப்­துல் கலாம் இலட்­சி­யக் கழ­கத்­தின் தொண்­டூ­ழி­யர்­கள் 40க்கும் மேற்­பட்­டோர் இந்­தப் பணியை மேற்­கொண்­ட­னர்.

முன்­ன­தாக அப்­துல் கலாம் இலட்­சி­யக் கழ­கத் தலை­வர் தூதர் கேச­வ­பாணி, டாக்­டர் அப்­துல் கலாமைப் பற்­றிய சில தக­வல்­களை நினை­வு­கூர்ந்­தார்.

சிறப்பு அழைப்­பா­ள­ராக லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா­) தலை­வர் சி.சங்கரநாதன், டாக்­டர் அப்­துல் கலா­மின் திரு­வுரு­வப்­ப­டத்­திற்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­ய­பின், டாக்­டர் அப்­துல் கலாம் பற்­றிய தம் நினை­வு­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார். மறைந்த நகைச்­சுவை நடி­கர் விவேக் தம்­மு­டைய நெருங்­கிய நண்­பர் என்­றும் அவ­ரோடு சேர்ந்து மரக்­கன்­று­களை நடும்­பணியை தாம் மேற்­கொண்­ட­தா­க­வும் திரு சங்­கரநா­தன் குறிப்­பிட்­டார்.

"சிங்­கப்­பூர் தூய்­மை­யான நாடு என்று உல­கத்­திற்கே தெரி­யும். இங்கே துப்­பு­ர­வுப் பணியா? என்று சிலர் கேட்­க­லாம். நாட்டைத் தூய்­மை­யாக வைத்­துக்­கொள்ள வேண்டும் என்­பது அவ­ரு­டைய கொள்­கை­யில் ஒன்று என்­றும் அவ­ரு­டைய கொள்­கையை நினை­வு­ப­டுத்­தும் பொருட்டு, குப்­பை­ அகற்றும் பணியை மேற்­கொள்­வது மிகச்­சிறந்த அஞ்­சலி என்­றும் திரு சங்கரநாதன் கூறி­னார்.

அவர் நினை­வாக மரக்­கன்­று­கள் நடும் பணி­யை­யும் சிங்­கப்­பூ­ரில் செய்­ய­வேண்­டும் என்ற தமது விருப்­பத்தை அவர் பதிவு செய்­தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திரு பி.அருமைச்­சந்தி­ரன், நிகழ்ச்­சியை எப்­படி நடத்­தப்­போகிறோம் என்ற விவ­ரங்­க­ளைத் தொண்டூ­ழியர்­களுக்கு அறி­வித்­த­து­டன், இந்­தப் பணிக்­காக முழு ஆத­ர­வை­யும் வழங்கி, துப்­பு­ர­வுப் பணிக்­கான கரு­வி­க­ளை­யும் தந்து உத­விய தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­துக்கு நன்றி தெரி­வித்துக்­கொண்­டார்.

அப்­துல் கலாம் இலட்­சி­யக் கழ­கத்­தைச் சேர்ந்த தொண்­டூ­ழி­யர்­கள் டாக்­டர் அப்­துல் கலா­முக்கு மரி­யாதை செலுத்­தி­னர். லிட்­டில் இந்­தி­யாவை 10 பிரி­வு­க­ளா­கப் பிரித்து, நான்கு பேர் கொண்ட அணி­கள் துப்­பு­ர­வுப் பணியை மேற்­கொண்­டன.

கொவிட்-19 நோய்த்­தொற்று கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளாக டாக்­டர் அப்­துல் கலா­முக்கு முறை­யாக அஞ்­சலி செலுத்­த­மு­டி­யா­மல் போனதை நினை­வு­கூர்ந்த பல­ரும், இந்த நிகழ்ச்­சி­யில் மிக மகிழ்ச்­சி­யு­டன் கலந்­து­கொண்டு அவர் மீது தங்­க­ளுக்­குள்ள அன்­பை­யும் மரி­யா­தை­யை­யும் வெளிப்­ப­டுத்­தி­னர். முனை­வர் நிஷார் அனை­வ­ருக்­கும் நன்றிகூற நிகழ்ச்சி நிறை­வ­டைந்­தது.