லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி தொடங்கு
வதற்கு முன்பு நட்புமுறை ஆட்டங்களில் அசத்திய ஸ்பர்ஸ் குழு, புதிய பருவத்தின் முதல் வார
இறுதியிலேயே லீக் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
ஆனால் அதற்கு முன்பு, நாளை நடைபெறும் ஆட்டத்தில் செல்சியை அது வீழ்த்த வேண்டும்.
வலிமைமிக்க செல்சியைத் தோற்கடித்து லீக் பட்டம் வெல்லும் தரம் தனக்கு இருப்பதை ஸ்பர்ஸ் நிரூபிக்க வேண்டும் என அதன் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
புதிதாகக் களமிறங்க இருக்கும் ஆறு ஆட்டக்காரர்கள் குழுவுக்கு வலுசேர்க்க, செல்சிக்கு எதிரான வியூகங்களை ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகி அண்டோனியோ கோண்ட்டே வகுத்து வருகிறார்.
ஆனால் இந்தப் புதிய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஸ்பர்சின் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. இம்மாதம் 6ஆம் தேதிஇப்பருவத்துக்கான தனது முதல் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு சவுத்ஹேம்டனைச் சந்தித்தது.
அதில் மிகவும் சிறப்பாக விளையாடிய ஸ்பர்ஸ், 4-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.
எனவே, ஸ்பர்ஸில் இணைந்
திருக்கும் புதிய ஆட்டக்காரர்கள் குழுவுக்கு வலுசேர்ப்பது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே களமிறங்கிய ஆட்டக்காரர்களும் வெற்றி
களைக் குவிக்கக்கூடியவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 32 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஸ்டாண்ஃபர்ட் பிரிட்ஜ் விளையாட்டரங்கத்தில் செல்சியை லீக் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் தோற்கடித்துள்ளது.
நாளைய ஆட்டத்தில் செல்சியை ஸ்பர்ஸ் வீழ்த்தினால் மான்செஸ்டர் சிட்டிக்கும் லிவர்பூலுக்கும் அது அச்சுறுத்தலாக அமையும்.
இதற்கிடையே, செல்சியும் அதன் முதல் ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் அது 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஸ்பர்ஸ் குழுவைப் போல கோல் மழை பொழியவில்லை என்ற
போதிலும் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி மூன்று புள்ளிகளை செல்சி பெற்றது.
எவர்ட்டனுக்கு எதிராக விளையாடியது போல் ஸ்பர்சுக்கு
எதிராகச் செயல்படுவது ஆபத்
தானது என்று செல்சியின் நிர்வாகி தாமஸ் டுக்கல் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல தமது குழுவின் தரம்
உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளில் செல்சியின் செயல்பாட்டைக் கூர்ந்து கவனித்தால், நான்கு
அல்லது ஐந்து இறுதிச் சுற்று
களுக்கு அது தகுதி பெற்றது.
"செல்சி போட்டித்தன்மை மிக்க குழு. நாள்கள் செல்லச் செல்ல அது மேலும் வலுவடையும்," என்று மான்செஸ்டர் சிட்டியிலிருந்து விலகி செல்சியில் இணைந்திருக்கும் ரஹீம் ஸ்டெர்லிங் தெரிவித்தார்.

