வசதிவாய்ப்பு குறைந்தவர்களுக்கு நூல்களைத் தந்து உதவும் 'ரீட் ஃபார் புக்ஸ்', அதாவது நூல் களுக்காக வாசிப்போம் எனும் நூல் நன்கொடைத் திரட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
தேசிய நூலக வாரியம் இந்தத் திரட்டுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கிய நூல் நன்கொடைத் திரட்டு 31ஆம் தேதி வரை நடைபெறும்.
பத்து பேர், 15 நிமிடத்துக்கு நூல் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு நூல், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான நூலகமான 'மைக்ரன்ட் வர்க்கர் லைப்ரரி' திட்டத்துக்கு நூல்கள் நன்கொடையாக வழங்கப்படும். சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள், தங்குவிடுதிகளிலும் பொழுதுபோக்கு நிலையங்களிலும் இலவசமாக நூல்களைப் பெற்று வாசிக்க இத்திட்டம் உதவுகிறது.
'வோண்டரீட்' (WondeRead) எனும் அமைப்பும் நன்கொடையாக நூல்களைப் பெறவுள்ளது. வசதி குறைந்த குடும்பப் பின்னணி கொண்ட சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் அமைப்பின் வழி இலவச நூல்கள் வழங்கப்படுகின்றன.
'நூல்களுக்காக வாசிப்போம்' திட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர், எனும் இணையத்தில் பதிந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தங்களது இடத்திலேயே 15 நிமிடத்துக்கு அவர்கள் வாசிக்கவேண்டும். அல்லது தேசிய நூல வாரியம் ஏற்பாடு செய்யும் கூட்டுவாசிப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாசிக்கலாம்.
வாசிப்பதைக் காட்டும் ஓரிரு புகைப்படங்களை எடுத்து அதை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
மேல்விவரம் தெரிந்துகொள்ள: