உணவுகுறித்த ஆலோசனைகள் எல்லாமே உண்மை அல்ல

உணவுகுறித்த ஆலோசனைகள் எல்லாமே உண்மை அல்ல

2 mins read
56df0e0a-e2cf-4136-895e-34ad37ccdea2
மாலையில் அதிக கலோரியுள்ள உணவை உண்டால் உடல் எடை கூடும் என்பதற்கு ஆதாரமில்லை. எப்போது உண்டாலும் அதிக கலோரிகள் உடல்நலத்துக்கு ஏற்றவையல்ல. படம்: ஹெல்த்ஹப்.எஸ்ஜி -

'காதால் கேட்­ப­தெல்­லாம் மெய்­யல்ல' என்று பெரி­ய­வர்­கள் சொல்­வதை நாம் கேட்­டி­ருக்­கி­றோம்.

பொது­வா­கவே இதை நாம் கடைப்­பி­டிக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்­ற­போ­தும் குறிப்­பாக உணவு குறித்த ஆலோ­ச­னை­களைக் கேட்க நேரிட்­டால் கட்­டா­யம் அதன் உண்­மைத்­தன்­மை­யைத் தீர விசா­ரித்து அறிந்­து­கொண்ட பிறகு முடி­வெ­டுக்க வேண்­டி­யது நம் கடமை.

உடல் எடை­யைக் குறைக்க விரும்­பு­கி­றீர்­கள் எனத் தெரிந்­து­கொண்­டாலோ உடல்­ந­லப் பிரச்­சி­னை­யில் இருந்து மீளும் சூழ­லில் இருந்­தாலோ தெரிந்­த­வர், தெரி­யா­த­வர், நண்­பர் எனப் பல தரப்­பி­ன­ரும் என்­னென்ன சாப்­பிட வேண்­டும், எப்­படி, எப்­போது சாப்­பிட வேண்­டும் என்று அறி­வுரை கூறத் தொடங்­கி­வி­டு­வார்­கள்.

'என்ன செய்­தால் நமது எண்­ணம் கைகூ­டும்' என்ற தவிப்­பில், கேட்­ப­தை­யெல்­லாம் அப்­ப­டியே நம்பி அதைக் கடைப்­பி­டிக்­கக் கூடாது. அப்­ப­டிக் கூறப்­படும் ஆலோ­ச­னை­களில் சில­வற்­றின் உண்­மைத்­தன்மை குறித்து வல்­லு­நர்­கள் கருத்­து­ரைத்­துள்­ள­னர்.

முத­லில் காய்­க­றி­களை உண்­டால் அதி­கம் சோறு சாப்­பிட இய­லாது; அத­னால் எடை குறை­யும் என்று பல­ரும் சொல்­வார்­கள். இது ஒரு­வி­தத்­தில் உண்­மையே என்­கி­றார்­கள் வல்­லு­நர்­கள்.

காய்­க­ளோடு உண­வைத் தொடங்­கி­னால் அதன் பிறகு கலோ­ரி­கள் அதி­க­முள்ள உணவு­வகை­களை அதி­கம் உண்ண இய­லாது. ஆனால் இதில் கவ­னிக்­கப்­பட வேண்­டிய முக்­கி­ய­மான அம்­சம் என்­ன­வென்­றால் காய்­க­றி­க­ளைப் பச்­சை­யா­கவோ சமைத்தோ உண்­ப­தற்­குப் பதில் அவற்­றைச் சாறு பிழிந்து குடித்து­விட நினைத்­தால் பல­னி­ருக்­காது என்­பது வல்­லு­நர்­க­ளின் எச்­ச­ரிக்கை.

ஏனெ­னில் சாற்­றில் நார்ச்­சத்து இல்லை. காய், பழம் ஆகி­ய­வற்­றில் உள்ள நார்ச்­சத்­தால்­தான் அவற்றை உண்­ட­வு­டன் வயிறு நிரம்­பிய உணர்வு ஏற்­பட்டு மற்ற உண­வு­வ­கை­களை நாம் அதி­கம் உண்­ப­தில்லை. சாறு பிழிந்து குடித்­தால் அத­னால் பல­னில்லை.

பழங்­களை வெறும் வயிற்­றில்­தான் உண்ண வேண்­டும். உண­வுக்­குப் பிறகு பழம் சாப்­பிட்­டால் அது நொதித்து செரி­மா­னக் கோளாற்றை உரு­வாக்­கும்; வாயுத்­தொல்லை ஏற்­படும் என்­று சொல்லப்படுவதற்கு ஆதா­ரம் ஏது­மில்லை என்று வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

உண­வுக்கு முன் தண்­ணீர் அருந்­தி­னால் செரி­மா­னம் பாதிக்­கும் என்­ப­தற்­கும் ஆதா­ரம் இல்லை. உண்­மை­யில் அது செரி­மா­னத்­துக்கு உத­வும் என்று கூறப்­ப­டு­கிறது. அதே­போல 'அல்­க­லைன்' எனப்­படும் காரத்­தன்மை நிறைந்த நீரைக் குடித்­தால் புற்­று­நோய் வராது என்று சொல்­லப்­ப­டு­வ­தற்­கும் அறி­வி­யல்­பூர்­வ­மான ஆதா­ரம் இல்லை என்பதை ஊட்டச்சத்து வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.