மூத்த தமிழறிஞர் டாக்டர் சுப. திண்ணப்பனுக்கு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விருது

தமிழ்­நாட்­டின் ஈரோட்­டைச் சேர்ந்த "மக்­கள் சிந்­த­னைப் பேரவை" அமைப்பு, சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த மூத்த தமி­ழ­றி­ஞ­ரான பேரா­சி­ரி­யர் சுப.திண்­ணப்­ப­­னுக்கு 'தகை­சால் தமிழ்ச் சான்­றோர்' என்­னும் விருதை வழங்கி உள்­ளது.

அவ­ரது தமிழ்ப் பணி­க­ளைப் பாராட்டி விருது வழங்­கப்­பட்­டது.

கடந்த 18 ஆண்­டு­க­ளாக செயல்­பட்டு வரும் மக்­கள் சிந்­த­னைப் பேரவை அமைப்பு, பல்­லா­யி­ரம் பேரை ஈர்க்­கும் புத்­த­கக் கண்­காட்­சியை ஒவ்­வோர் ஆண்­டும் ஈரோட்­டில் நடத்தி வரு­கிறது.

இவ்­வாண்டு கண்­காட்­சி­யில் கடந்த 9ஆம் தேதி நடந்த பன்­னாட்­டுத் தமி­ழ­ரங்­கத்­தில் விருது அளிக்­கப்­பட்­டது.

மலே­சியா, சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, தென்­கொ­ரியா, ஜெர்­மனி, ஸ்காட்­லாந்து, பிரான்ஸ், மாலத்­தீவு, ஜப்­பான், சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வந்த 10 தமிழ் அறி­ஞர்­கள் அதில் பங்­கேற்­ற­னர்.

முன்­ன­தாக டாக்­டர் திண்­ணப்­பன் தலை­மை­யில் நடந்த சிறப்பு இணை அமர்­வில் தமிழ் வளர்ச்சி பற்­றிய சிந்­த­னை­கள், செயல்­கள் குறித்து விவா­திக்­கப்­பட்­டன.

டாக்­டர் சுப.திண்­ணப்­பன் தமது ஏற்­பு­ரை­யில் வள்­ளு­வர் வழங்­கும் 'நூல்' பற்­றிய சிறப்­பு­களை சுருக்­க­மாக விளக்­கிப் பேசி­னார்.

பொது­மக்­கள், மாண­வர்­கள் ­என 2,000 பேருக்­கு ­மேல் நிகழ்ச்­சி­யில் கலந்துகொண்­ட­னர்.

செய்தி: சிங்­கப்­பூர் தமிழ்

எழுத்­தா­ளர் கழ­கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!