உலக அளவில் புற்றுநோயால் ஏற்படும் கிட்டத்தட்ட பாதி மரணங்கள் தவிர்க்கக்கூடிய நோய் அபாயக் காரணங்களால் நிகழ்வதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
அவற்றில் மது குடித்தல், புகைப்பிடித்தல், அதிக உடல் எடை ஆகிய மூன்றும் புற்றுநோய் மரணங் களுக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
தி லான்சட் ஆய்விதழில் சென்ற வியாழக்கிழமை வெளியான ஆய்வு இதைத் தெரிவித்தது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், 204 நாடுகளில் 2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் புற்றுநோயால் ஏற்பட்ட புற்றுநோய் மரணங்களையும் உடல்குறைபாடு களையும் ஆய்வு செய்தனர். குறிப்பாக, 23 வகைப் புற்று நோய்களும் அவற்றுக்கான 34 அபாயக் காரணங்களும் ஆராயப்பட்டன.
நோய் அபாயத்தால் ஏற்படும் புற்றுநோய் பற்றி உலகில் நடத்தப்பட்ட மிக விரிவான ஆய்வு இதுவாகும்.
புகைப்பிடித்தல், மது, உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாசு, வேலையில் அபாயமான ரசாயனங்களுடன் தொடர்புகொள்ளுதல் போன்றவற்றால் தவிர்க்கக்கூடிய புற்றுநோய் அபாயங்களாகக் கருதப்படுகின்றன.
கடந்த 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை இவைபோன்ற தவிர்க்கக்கூடிய காரணங்களால் ஏற்படும் புற்றுநோய் மரணங்கள் 20.4 விழுக்காடு உயர்ந்துள்ளது.
மேலும், 2019ல் மட்டும் புற்றுநோயால் மாண்ட 4.45 மில்லியன் பேருக்கு தவிர்க்கக்கூடிய காரணங்களால் அந்நோய் ஏற்பட்டிருந்தது. ஒட்டுமொத்த புற்றுநோய் மரணங்களில் இது 44 விழுக்காடு ஆகும்.
அதனுடன், அந்தக் காரணங் களால் உடல்நலத்தோடு இருந்திருக்க வேண்டிய ஆண்டுகளில் 42 விழுக்காட்டை நோயாளிகள் இழந்தனர் என்று ஆய்வு கூறியது.
புற்றுநோய் அபாயக் காரணங் களால் பெண்களைவிட ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். புகைப்பிடிக்கும், மது அருந்தும் பெண்களைவிட ஆண்களே அதிகம் என்பதும் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
உடல் பருமனால் ஏற்படும் புற்று நோய் மரணங்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளன. இந்தப் போக்கு குறிப்பாக வளரும் நாடுகளில் அதிகம் காணப்பட்டது.
புற்றுநோயை ஏற்படுத்தும் உலக அளவில் புகைப்பிடித்தல்தான் புற்று நோய்க்கு முக்கிய காரணமாக தொடர்ந்து நிலவுகிறது.
2019ல் ஏற்பட்ட 36 விழுக்காட்டு புற்றுநோய் மரணங்கள், மூச்சுக் குழாய், அதன் கிளைக்குழாய், நுரையீரல் ஆகியவற்றில் புற்றுநோய் காரணமாக இருந்தது.
வயிறு, உணவுக்குழாய், குடல் தொடர்பான புற்றுநோய் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
"பழக்கவழக்கங்களை மாற்றினால் மில்லியன் கணக்கில் உயிர்களைக் காப்பாற்றலாம். எந்தப் புற்று நோய் மருந்தும் செய்யக்கூடியதைவிட இது பெரிது," என்று அமெரிக்க புற்றுேநாய் எதிர்ப்புச் சங்கத்தின் தலைமை விஞ்ஞானி வில்லியம் டாஹுட் கூறினார்.

