எண்ணெய் கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மை

2 mins read
510543da-404d-43d0-bd81-02865214ff9e
தேங்காய், நெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு வாயைக் கொப்பளிக்கலாம். எண்ணெய் கொப்பளித்து விட்டு உடனேயே பல் துலக்க வேண்டாம். படம்: இணையம் -

வாயில் எண்­ணெய் வைத்­துக் கொப்­ப­ளித்­தல், இந்­தி­யா­வில் கடை­பி­டிக்­கப்­பட்டு வந்த பாரம்­ப­ரிய ஆயுர்­வேத சிகிச்சை முறை­யா­கும். கடந்த சில ஆண்­டு­க­ளாக அதன் நன்­மை­கள் பர­வ­லா­கத் தெரிய வந்­துள்­ளன.

ஆங்­கி­லத்­தில் 'ஆயில் புல்­லிங்' என்று கூறப்­படும் வாயில் எண்­ணெய்க் கொப்­ப­ளித்­தல் பல நன்­மை­களை அளிக்­கும் என்று அறி­வில் ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

நமது வாயில் 700 வகைக் கிரு­மி­கள் வரை இருக்­கக்­கூ­டும்.

பல் வலி, சொத்தை, ஈறு­களில் வலி, வீக்­கம் உள்­ளிட்ட பல்­வேறு பல் பிரச்­சி­னை­களை அவை உண்­டாக்­க­லாம். அவற்­றைத் தடுக்க வாயில் எண்­ணெய்க் கொப்­ப­ளித்­தல் உத­வு­வ­தாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

பல­ருக்­கும் பெரும் தலை­வ­லி­யாக உள்ள வாய் துர்­நாற்­றத்­தை­யும் எண்­ணெய்க் கொப்­ப­ளித்­தல் குறைக்­கிறது. பற்­கள் இயற்­கை­யாக வெண்மை பெற­வும், உட­லில் ஏற்­படும் அழற்­சி­யை­யும் எண்­ணெய்க் கொப்­ப­ளித்­தல் குறைப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

தேங்­காய் எண்ணெய், நெய், நல்­லெண்­ணெய் ஆகி­ய­வற்­றைக் கொண்டு வாயைக் கொப்­ப­ளிக்­க­லாம்.

பொது­வா­கவே, இர­வில் தூங்கி காலை­யில் விழிக்­கும் போது நமது உடல் சூடாக இருக்­கும்.

குறிப்பாக நல்­லெண்­ணெயில் வாய் கொப்­ப­ளிப்­ப­தால் உடல் குளிர்ச்­சி­ய­டை­யும். முகம் பள­ப­ளப்­பா­க­வும் இருக்­கும்.

சூட்­டி­னால் உண்­டா­கும் கண் எரிச்­சல், வாய்ப்­புண் குண­மா­கும். இர­வில் தூக்­க­மில்­லா­மல் அவ­திப்­ ப­டு­ப­வர்­க­ளுக்கு ஆழ்ந்த தூக்­கம் வரும்.

காலை­யில் எழுந்­த­வு­டன் வெறும் வயிற்­றில் வாயில் எண்­ணெய்யால் கொப்­ப­ளிப்­பது அவ­சி­யம். ஒன்று ஒன்று அல்­லது இரண்டு மேசைக்­ க­ரண்டி எண்­ணெய்யை 15 முதல் 20 நிமி­டங்­கள் வரை வாய்க்­குள் வைத்து கொப்­ப­ளிக்க வேண்­டும்.

எண்­ணெய்­யின் தன்மை மாறி, வெள்ளை நிறத்­தில் லேசான நுரை­யோடு, பிசு­பி­சுப்­பின்றி மாறும் வரை வாய்க்­குள் கொப்­ப­ளிக்க வேண்­டும். அ

தன் பிறகு அதை முழு­வ­து­மாக வெளியே துப்­பி­விட்டு, வாய்க்­குள் தண்­ணீர் விட்டு மீண்­டும் கொப்­ப­ளித்து, சுத்­தம் செய்ய வேண்­டும்.

வாயில் எண்­ணெய் வைத்­துக் கொப்­ப­ளித்த பிறகு அதை நன்­றாக தண்­ணீர் விட்டு அல­சு­வது முக்­கி­யம்.

எண்­ணெய் கொப்­ப­ளித்த உட­னேயே பல் துலக்க வேண்­டாம். வாயில் கொப்­ப­ளித்த எண்ணெய்யை விழுங்­கக்கூடாது. அதை துப்பி­விட வேண்­டும்.