வெற்றிலையை ஒதுக்குவது சரியா?

வெற்றிலையை ஒதுக்குவது சரியா?

1 mins read

வெற்­றிலை, பாக்கு, சுண்­ணாம்பு, ஏலக்­காய், கிராம்பு, சாதிக்­காய், என வாச­னைப் பொருட்­கள் கலந்து தாம்­பூ­லம் இடு­வ­தற்கு சித்த மருத்­து­வம் வழி முறை­ களைக் கூறு­கிறது.

ஆனால் மறுபக்கம், வெற்­றி­லைப் பாக்கு மெல்­லும் பழக்­கம் கெடு­தல் என்­றும் அதைச் சுண்­ணாம்­பு­டன் மென்­றால் புற்­று­நோய் வரக்கூடும் என்­றும் கூறப் படு­கிறது. இருப்­பி­னும், குறிப்­பாக வெற்­றிலை உட­லுக்கு பல நன்மை ­க­ளைத் தர வல்லது.

வெற்­றி­லையை உலர வைத்து அதைப் பொடி­யாக்கி உண்­ணும்­போது உட­லில் உள்ள சர்க்­கரை அளவு குறை­யும். கெட்ட கொழுப்பை நீக்­கும் தன்­மை­யும் வெற்றிலைக்கு உள்­ளது.

ஆஸ்­துமா போன்ற நோய்­ களை­யும் உடலில் ஏற்படும் அழற்சி­யை­யும் கட்­டுப்­ப­டுத்­தும் கிருமி நாசி­னி­களும் வெற்­றி­லை­யில் உள்­ளன. வாய், பற்­க­ளின் சுகா­தா­ரத்தையும் அது காக்­கிறது.

உட­லில் மகிழ்ச்­சியை உண்­டாக்­கும் 'கெட்­டச்­சோ­ல­மின்' சுரப்பு ­நீர் வெற்றிலையை மெல்லும்போது வெளி­யா­கிறது. இத­னால் மகிழ்ச்சி­ பெருகி, மன அழுத்­தம் குறை­வ­தா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது.

வெற்­றி­லை­யில் உள்ள 'ஹைட்­ரோக்சி செவிக்­கால்' எனும் ரசா­ய­னம் ஆண்­க­ளின் புரோஸ்­டேட் சுரப்­பியை வலுப்­ப­டுத்­து­கிறது.

இது மலட்­டுத்­தன்­மை­யை­யும் புரோஸ்­டேட் புற்­று­நோய் அபா­யத்­தை­யும் தடுக்­கும் ஆற்­றல் கொண்­டது.