லஸாடா நிறுவனத்துடன் லிஷா புரிந்துணர்வு

லஸாடா நிறுவனத்துடன் லிஷா புரிந்துணர்வு

2 mins read
7ef53b87-e41a-48ca-b000-5f4179f5c3ef
லஸாடாவின் தலைமை நிர்வாகி லோ வீ லீ, லிஷா செயலாளர் பா. ருத்திராபதி இருவரும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டனர். அதை லிஷா துணைத் தலைவர் ராஜ்குமார் சந்திரா, முன்னாள் தூதர்திரு கே.கேசவபாணி, புக்கிட் பாத்தோக் தொகுதி நாாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை ஆகியோர் நின்று பார்த்தனர். படம்: லிஷா -

மோன­லிசா

லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர் களி­டையே மின்­னி­லக்­க­ம­யத்தை அதி­க­ரிக்­கும் நோக்­கில் லிஷா எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் மர­பு­டை­மைச் சங்­கம் பிர­பல மின்வர்த்­தக தள­மான லஸா­டா­வு­டன் புரிந்­து­ணர்வு ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது.

இந்­திய மர­பு­டை­மைச் சங்­கத்­தில் கடந்த சனிக்­கி­ழமை காலை அதற்­கான நிகழ்ச்சி நடை­பெற்­றது.

புக்­கிட் பாத்­தோக் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முரளி பிள்ளை சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொண்­டார்.

லஸா­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி லோ வீ லீயும் லிஷாவின் செயலாளர் பா. ருத்­தி­ரா­ப­தி­யும் இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

"இம்­மு­யற்­சி­யின் மூலம் வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளுக்கு வேண்­டிய அனைத்து பொருள்­க­ளை­யும் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே வாங்க இய­லும். லஸாடா ஆறு நாடு­களில் செயல்­ப­டு­கிறது. இத­னால் நம­து­வர்த்­த­கர்­க­ளின் பொருட்­களை பிற நாட்­டி­னர் வாங்­கும் வாய்ப்பு அதி­க­ரிக்­கும். இந்த வாய்ப்பை அனைத்து வர்த்­த­கர்­களும் பயன்­ ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்," என்று திரு ருத்­தி­ரா­பதி கூறி­னார்.

லிஷா­வில் ஏறத்­தாழ 1,000 வர்த்­த­கர்­கள் உள்­ள­னர் என்­றும் அவர்களில் 624 வர்த்­த­கர்­கள் பதிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர் களுக்குப் பயன்­படும் வகை­யில் லஸாடா தளத்­தில் அவர்­க­ளுக்­கென்று பாதை உரு­வாக்­கப்­பட்டு அவர்­க­ளு­டைய பொருட்­கள் இணை­யம் மூலம் விற்­கப்­படும்.

"வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை தேர்ந்­தெ­டுத்து அதன் விலையை பிற கடை­க­ளு­ட­னும் ஒப்­பிட்டுப் பார்த்து வாங்­கும் வச­தி­யும் இருக்­கும்," என்று லிஷா­வின் துணை தலை­வர் ராஜ்­கு­மார் சந்­திரா தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரில் 5000க்கும் மேற்­பட்ட சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் உள்­ளன. ஆனால் அவற்­றில் 20 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே இணைய வர்த்­த­கத்­தில் இணைந்­துள்­ளன.

"இன்­றைய நவீன சூழ­லில் அதிக சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மாக மாறு­வது அவ­சி­யம். அவ்­வ­கை­யில் லிஷா அமைப்­பு­டன் கைகோர்ப்­ப­தில் பெரு­ம­கிழ்ச்சி அடை­கி­றோம்," என்று திரு லோ குறிப்­பிட்­டார்.

நிகழ்ச்­சி­யில் சிங்­கப்­பூ­ரின் 57ஆவது தேசிய தினத்தை கொண்­டா­டும் வகை­யில் ஃபூவ்சோ மெத்­த­டிஸ்ட் பாலர்­பள்ளி மாண­வர்­கள் தேசிய கீதத்தை பாடி­யும் உறு­தி­மொ­ழியை ஒப்­பு­வித்­தும் நட­னம் ஆடி­யும் பார்­வை­யா­ளர்­களை மகிழ்­வித்­த­னர்.